விருப்பம் போல் வாழ்க்கை அமைய 12 சனிக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Sakthi Raj Jun 13, 2025 05:39 AM GMT
Report

மனிதனாக பிறந்த எல்லோருக்கும் ஆசைகளும் விருப்பங்களும் இருக்கும். ஆனால், கால சூழ்நிலையாலும் விதியின் விளையாட்டாலும் பலராலும் அவர்கள் நினைத்தப்படி சில வேலைகளை செய்யமுடியவில்லை.

அவ்வாறான சூழ்நிலையில் அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் இறைவழிபாடு மட்டுமே. இறைவழிப்பாடு என்பது நாம் நினைத்த காரியங்கள் நடப்பதற்காக செய்யும் வேண்டுதல் மட்டும் அல்லாமல், அவை நம் மனதை பக்குவம் அடைய செய்யும் ஒரு வழி என்று தான் சொல்ல வேண்டும்.

விருப்பம் போல் வாழ்க்கை அமைய 12 சனிக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்யுங்கள் | Tirupathi Perumal Valipadu

அதாவது, நிலையற்ற வாழ்வில் எதுவும் நிலையில்லாதது என்று மனிதர்கள் உணர்ந்து கொண்டாலே எதையும் எதிர்பாராமல் தங்கள் கடமையை செய்வார்கள். மேலும், நமக்கு ஒரு விஷயம் வேண்டும் என்றால் அதை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நம் கடமையை செய்வது மட்டுமே நாம் அடையும் முதல் வெற்றி ஆகும்.

அப்படியாக, வாழ்க்கையில் எண்ணங்களும் விருப்பங்களும் நிறைவேறாமல் அதில் பல தடைகளையும் தடங்களையும் சந்திக்கின்றோம் என்றால் நாம் செய்யவேண்டிய வேலையை சரியாக செய்து இறைவனிடம் அனைத்தையும் விட்டுவிட வேண்டும்.

சித்தர்கள் கூறிய சனீஸ்வர தீபம்- எப்பொழுது ஏற்ற வேண்டும் தெரியுமா?

சித்தர்கள் கூறிய சனீஸ்வர தீபம்- எப்பொழுது ஏற்ற வேண்டும் தெரியுமா?

மேலும், காலம் காலமாக ஒரு பழமொழி கேள்வி பட்டு இருப்போம் திருப்பதிக்கு சென்றால் திருப்பம் உண்டாகும் என்று. அந்த வகையில் வாழ்க்கையில் நல்லதோர் திருப்பம் சந்திக்க நாம் ஏழுமலையானை சரண் அடைவது மிக சிறந்த பலன்களை கொடுக்கும்.

அதோடு, தொடர்ந்து 12 வாரங்கள் சனிக்கிழமையன்று விரதமிருந்து வீட்டில் அல்லது அருகில் இருக்கும் பெருமாள் ஆலயம் சென்று அங்கு நம்முடைய விருப்பங்கள் நிறைவேற விளக்கு ஏற்றினால் ஏழுமலையான் அருளால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் உண்டாகும்.

இதை நாம் முழுமனதோடு இறைவனை சரண் அடைந்து செய்திட வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களை காணலாம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US