முருகப்பெருமானை போல் குழந்தை பிறக்க தம்பதியினர் செய்யவேண்டிய வழிபாடு
கலியுக வரதன் என்றால் அது முருகப்பெருமான் மட்டும் தான். அப்படியாக, பலரும் தங்களுக்கு குழந்தை முருகன் போல் பிறக்க வேண்டும் என்று எண்ணுவதுண்டு. அதனால் முருகப்பெருமானை தொடர்ந்து வழிபாடு செய்வார்கள்.
அதோடு நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் முருகனை நினைத்து விரதம் இருந்து வழிபாடு மேற்கொண்டு கையில் குழந்தை பெற்றவர்கள் ஏராளம். அப்படியாக, கருவில் உள்ள குழந்தை இறைவன் கொடுத்த வரம்.
அந்த வரம் நல்ல ஆரோக்கியத்தோடு பிறக்கவேண்டும் என்பது மிக மிக முக்கியம். அதற்காக நல்ல மருத்துவரை சந்தித்து ஆலோசனைகள் பெற்றாலும், அவர்கள் இறைவழிபாட்டிலும் அதிகம் கவனம் செலுத்துவார்கள்.
அதாவது, மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி இந்த தெய்வ சக்தி. தெய்வம் நினைத்து விட்டால் கடைசி நொடியிலும் எதுவும் மாற்றம் பெரும். அந்த வகையில் கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமாகவும், முருகனை போல் நல்ல அறிவோடும் அழகோடும் பிறக்க தம்பதிகள் செய்ய வேண்டிய வழிபாட்டைப் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் சுபம் மாரிமுத்து அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |