திருப்பதியில் பௌர்ணமி கருட வாகன புறப்பாடு

By Yashini May 24, 2024 01:00 PM GMT
Report

திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினம் அன்று திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெறும்.

அந்தவகையில், பௌர்ணமி தினமான நேற்று திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெற்றது.

திருப்பதியில் பௌர்ணமி கருட வாகன புறப்பாடு | Tirupati Eyumalayan Temple Purnami Garuda Vahanam  

கருடவாகன புறப்பாட்டை முன்னிட்டு கோவிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்த உற்சவர் மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

தொடர்ந்து நான்கு மாட வீதிகளில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெற்றது.

திருப்பதியில் பௌர்ணமி கருட வாகன புறப்பாடு | Tirupati Eyumalayan Temple Purnami Garuda Vahanam  

ஏழுமலையானின் கருட வாகன புறப்பாட்டை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.   

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.   

    

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US