தினம் ஒரு திருவாசகம்
Bakthi
Thiruvasagam
By Sakthi Raj
பேசப் பட்டேன் நின்னடி யாரில் திருநீறே,
பூசப் பட்டேன் பூதல ரால்உன் அடியானென்,
றேசப் பட்டேன் இனிப்படு கின்ற தமையாதால்,
ஆசைப் பட்டேன் ஆட்பட் டேன்உன் அடியேனே.
விளக்கம்
நின்னுடைய அடியார்களால், நானும் ஓர் அடியாள் என்று பேசப்பட்டேன்; நின்னுடைய அடியார்கள் போலவே, நானும் திருநீறு பூசப்பட்டேன்
அதே சமயம் அமைச்சர் பதவியை இழந்து, நின் அடியாராகத் திரிவதாக, உலக மக்களால் இகழ்ந்து உரைக்கப்பட்டேன்
இனியும் துன்பத்தைப் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது; அதனால் நினது திருவடிகளை வந்து அடைய ஆசைப்பட்டேன்.உனக்கு அடிமையும் ஆனேன்; காத்து அருள்வாயாக!
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |
+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US