தினம் ஒரு திருவாசகம்
By Sakthi Raj
உணர்ந்த மாமுனிவர் உம்பரோ டொழிந்தார்
உணர்வுக்கும் தெரிவரும் பொருளே
இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே
எனைப் பிறப் பறுக்கும்எம் மருந்தே
திணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே
திருப்பெருந் துறைஉறை சிவனே
குணங்கள் தாம் இல்லா இன்பமே உன்னைப்
குறுகினேற் கினிஎன்ன குறையே!
விளக்கம்
கலைஞானமுடைய பெரிய முனிவர்களும் வானோரும் பிறரும் அறிய முடியாத பெரும் பொருளே, ஓப்பில்லாதவனே, எல்லா உயிருக்கும் உயிரானவனே, என்னுடைய பிறப்பை நீக்கும் அமுதமே, ஆணவ வல்லிருளை அடக்கும் தெளிவான திருவருள் வெளியே, திருப்பெருந்துறையுறை சிவனே, முக்குணத் தொடர்பில்லாத எண்கணத் தொடர்பான பேரின்பமே, உன்னையடைந்த எனக்கு இனிமேல் என்ன குறையுள்ளது?
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US