சொந்தவீட்டில் அமரச் செய்து அழகு பார்ப்பார் அழகன் முருகன்

By Sakthi Raj Jul 23, 2024 11:30 AM GMT
Report

பொதுவாகவே என்ன துன்பமோ சற்று நேரம் முருகனை நினைத்து அமர்ந்து வழிபாடு செய்ய அந்த துன்பத்திற்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

மனம் இயல்பாகுவதை கவனிக்க முடியும்.அப்படியாக செவ்வாய்க்கிழமை வேலவனை வழிபடுவது மகத்துவம் நிறைந்ததாக கருதப்படுகிறது.

ஒருவர் வாழ்க்கையில் தீராத பிரச்சனை தேவை இல்லாத மன சலனம் இருப்பவர்கள் செவ்வாய் கிழமை அன்று முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி செந்நிற மலர்கள் சுட்டி வழிபட வாழ்க்கையில் நல்லதோர் மாற்றம் நடக்கும்.

சொந்தவீட்டில் அமரச் செய்து அழகு பார்ப்பார் அழகன் முருகன் | Tuesday Murugan Worship Temple

கோயில்குக் சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டிலே முருகன் படம் முன் அமர்ந்து கற்கண்டு நைவேத்தியம் செய்து, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யும்பொழுது வந்த வருகின்ற துன்பம் எல்லாம் ஓடி விடும்.

மேலும் வாழ்வில் இதுவரை இல்லாத, கிடைக்காத, தாமதப்பட்டு வந்த முன்னேற்றமெல்லாம் வரிசையாகக் கிடைக்கும். வீடு மனை யோகம் தருவதில் முதலிடம் எப்போதுமே முருகப்பெருமானுக்குதான்.

கொடிய தோஷங்களை போக்கும் பாதாள பைரவர் வழிபாடு

கொடிய தோஷங்களை போக்கும் பாதாள பைரவர் வழிபாடு


எனவே முருகனை மனதார பிரார்த்தனை செய்தால் சொந்த வீடு நிலம் வாங்கவேண்டும் என்று நினைப்பவர்கள் கூடியவிரைவில் சுபகாரியம் நடக்கும்.

முருகனை தொடர்ந்து பிரார்த்தனை செய்ய முருகப்பெருமான் சொந்தவீட்டில் உங்களை அமரச் செய்து அழகு பார்ப்பார் என்பது தவிர்க்க முடியாத உண்மை.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US