திருப்பரங்குன்றத்தில் நாளை வைகாசி விசாக திருவிழா

By Yashini May 21, 2024 10:30 AM GMT
Report

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகும்.

இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 13 தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

கடந்த 8 நாட்கள் வசந்த மண்டபத்திற்கு உற்சவர் சன்னதியில் இருந்து சுப்பிரமணிய சுவாமி ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருப்பரங்குன்றத்தில் நாளை வைகாசி விசாக திருவிழா | Vaikasi Visakha Festival At Thiruparangunram

மேலும் அங்கு தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 

இந்நிலையில், விழாவில் சிகர நிகழ்ச்சியான முருகப்பெருமான் பிறந்த நாளான வைகாசி விசாக திருவிழா நாளை புதன்கிழமை நடக்கிறது.

வைகாசி விசாகத்தன்று தெய்வானை, வள்ளி சமேத சண்முகப்பெருமானுக்கு அதிகாலை முதல் மாலை வரை மகா பாலாபிஷேகம் நடைபெறும்.

திருப்பரங்குன்றத்தில் நாளை வைகாசி விசாக திருவிழா | Vaikasi Visakha Festival At Thiruparangunram

ஆண்டுக்கு ஒருமுறை சண்முகப்பெருமானுக்கு நடைபெறும் பாலாபிஷேகத்தை காண்பது கண்கொள்ளாகாட்சியாக இருக்கும்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் திரளான பக்தர்கள் வந்து நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US