எவ்வளவு அவசரமான நிலையிலும் இந்த பொருட்களை மட்டும் கடன் வாங்காதீர்கள்
நம் வாழ்க்கையில் எல்லா நேரமும் எல்லா பொருட்களும் நம்மிடம் இருப்பது இல்லை. அவ்வாறான சமயங்களில் நாம் நெருங்கிய உறவுகளிடமும் நண்பர்களிடமும் நமக்கு தேவையான பொருட்களை கடன் வாங்க நேரிடும்.
அப்படியாக, நமக்கு எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையிலும் ஒரு சில பொருட்களை மட்டும் கடன் வாங்கவே கூடாது என்கிறார்கள். அவ்வாறு வாங்கும் பொழுது அவை வாஸ்து பிரச்சனைகளையும் சில பண இழப்புகளையும் சந்திக்கக்கூடும் என்கிறது சாஸ்திரங்கள். அதைப்பற்றி பார்ப்போம்.
உப்பு:
நாம் ஒருப்பொழுதும் உப்பை பிறரிடம் கடனாக வாங்கக்கூடாது. உப்பு சனி கிரகத்துடன் தொடர்புடையது. ஆதலால், நாம் இலவசமாகவோ அல்லது கடனாகவோ உப்பு பிறரிடம் வாங்கும் பொழுது அவை நமக்கு சில பொருளாதார நெருக்கடிகளை உண்டு செய்வதாக சொல்கிறார்கள்.
பர்ஸ்:
கால சுழற்சியில் நாம் நெருங்கிய நபர்களுக்கு பர்ஸ்களை பரிசாக வழங்கும் பழக்கம் வைத்திருக்கின்றோம். ஆனால் அவ்வாறு வாங்குவது நமக்கு சில பொருளாதார தடங்கள் உண்டு செய்வதாக சொல்கிறார்கள்.
கைக்குட்டை:
அதே போல், வாஸ்து ரீதியாக நாம் கைக்குட்டையை ஒருவருக்கு பரிசாகவோ அல்லது கடனாகவோ கொடுக்கக்கூடாது. அவ்வாறு கொடுப்பது அந்த உறவை முறித்து விடும்.
கைக்கடிகாரம்:
நாம் வேறு ஒருவர் பயன்படுத்திய கைக்கடிகாரத்தை ஒரு பொழுதும் பயன் படுத்தக்கூடாது. அவ்வாறு வாங்கி அணியும் பொழுது சில மோசமான கால சூழலில் சிக்க நேரிடும் என்கிறார்கள்.
தீப்பெட்டி:
நாம் ஒரு பொழுதும் ஒருவரிடம் தீப்பெட்டியை இலவசமாக வாங்கி பயன்படுத்தக் கூடாது. மேலும், தீப்பெட்டிகள் மற்றும் லைட்டர்களை இலவசமாக எடுத்துச் செல்வது ராகு தோஷத்தை அதிகரிக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |