வீட்டில் உள்ள மணி பிளான்ட் செடி வாடிப்போனால் என்ன நடக்கும் தெரியுமா?
மணி பிளான்ட் தென்கிழக்கு ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் செடி வகையாகும்.
மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இது மிகவும் பிரபலம். இது வீட்டை அலங்கரிக்க பயன்படுத்தப்படும் செடியாகும்.
பொதுவாகவே, மணி பிளான்ட்டை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும், கடன் தொல்லை தீரும் என பலரது நம்பிக்கை.
அந்தவகையில், வீட்டில் உள்ள மணிபிளாண்ட் செடி வாடிப்போனால் ஜோதிட சாஸ்திரத்தின் படி மங்களகரமானதாக கருதப்படவில்லை.
இவ்வாறு மணி பிளான்ட் வாடினால் நிதி சரிவு ஏற்படலாம். மேலும், வீட்டின் எதிர்மறை ஆற்றலை இது குறிக்கிறது.
இது உங்களின் வாழ்க்கை மற்றும் குடும்பத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
அதேபோல், சுக்கிரனின் தொடர்புடைய இந்த மணி பிளான்ட் சுக்கிரன் மோசமாக இருந்தாலும் வாடிவிடும்.
வீட்டில் மணி பிளான்ட் செடியை வெப்பநிலை சாதாரணமாக இருக்கும் இடத்தில் வையுங்கள். மேலும், தென்கிழக்கு மூலை வீட்டில் ஒரு மணி பிளான்ட்டை நடவு செய்ய சிறந்ததாக கருதப்படுகிறது.
குறிப்பாக செடியில் உள்ள காய்ந்த இலைகளை செடியிலிருந்து உடனடியாக நறுக்கி எடுக்கவேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |