ஒரே ஒரு வழிபாட்டில் கோடீஸ்வர யோகத்தை பெற வேண்டுமா? எளிய பரிகாரம் இதோ
கோடீஸ்வர யோகத்தை தரும் ஏலக்காய் மாலை வழிபாடு குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
தெய்வ வழிபாடு
பொதுவாக இந்து மத நம்பிக்கையின் படி, அனைத்து தெய்வத்திற்கு மாலை அணிவித்து பூஜை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
உலகில் வாழ்வதற்கு பொருளாதாரம் மிக அவசியமாக இருக்கின்றது. அந்த வகையில் செல்வத்திற்கு அதிபதியாக கருதப்படும் மகாலட்சுமி தேவியை பலரும் வணங்கி செல்வ செழிப்புடன் வாழ்கின்றனர்.
பொதுவாக நறுமணம் கொண்ட பொருட்களில் மகாலட்சுமி வாசம் செய்வதாகவும் நம்பப்படுகின்றது. அவ்வாறு மகாலட்சுமி அம்சம் கொண்ட பொருட்களில் ஒன்று தான் கிராம்பு மற்றும் ஏலக்காய் ஆகும்.
இவை இரண்டும் மூலிகை வகை தாவரங்களாக இருக்கும் நிலையில், சமையலுக்கு மட்டுமின்றி செல்வ வளத்தையும் பெருக்குவதாக நம்பிக்கை இருக்கின்றது.
ஏலக்காய் மாலை வழியாடு
செல்வ செழிப்பை அள்ளித்தரும் மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு வெள்ளிக்கிழமை அன்று நீங்கள் வழக்கமாக செய்யக்கூடிய பூஜையை செய்த பின்பு குத்துவிளக்கி ஒன்றினை தனியே பூஜையில் வைக்கவும்.
விளக்கிற்கு மஞ்சள், குங்குமம் வைத்து, விளக்கின் பாதத்தையும் மலர்களால் அலங்காரம் செய்யவும். இந்த அலங்காரத்தில் மணம் வீசும் மல்லிகை கட்டாயம் இருக்க வேண்டுமாம்.
கிராம்பு மற்றும் ஏலக்காயை 54 அல்லது 108 என்ற எண்ணிக்கையில் எடுத்து ஊசி நூல் கொண்டு ஏலக்காயை மாலையாகவும், பூ தொடுப்பது போன்று ஏலக்காயையும் கட்டிக்கொண்டு, நைவேத்தியமாக ஏதாவது ஒரு இனிப்பை வைத்துக்கொள்ளவும்.
மேலும் வெற்றிலை, பாக்கு, பழம் இவற்றில் காணிக்கையாக பணம் இவற்றினை வைத்து, இரண்டு மாலையையும் விளக்கில் சாற்றி, விளக்கின் ஐந்து முகங்களிலும் தீபம் ஏற்றி, மகாலட்சுமி சுலோகத்தை உச்சரிக்கவும்.
இதனைத் தொடர்ந்து 21 வாரங்கள் செய்து வந்தால் குபேர யோகத்தை நிச்சயமாக அடைய முடியும் என்று சாஸ்திரம் கூறுகின்றது.
மாலைகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அதன் நிறமும் மணமும் மாறும் பட்சத்தில் வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம்.
முடிந்த வரையில் இந்த பூஜையை வெள்ளிக்கிழமை செய்யவும். அவ்வாறு முடியாதவர்கள் ஒரு பௌர்ணமியிலும் தொடங்கி செய்யலாம். பூஜை செய்ய வேண்டிய நேரம் காலை 6 முதல் 7, மதியம் 1 முதல் 2, இரவு 8 முதல் 9 மணி வரை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |