வீடு கட்டுபவர்கள் அவசியம் அறிய வேண்டிய வாஸ்து தகவல்கள்

By Sakthi Raj Jul 27, 2024 11:30 AM GMT
Report

நாம் வீடு கட்டும் பொழுது நமக்கு பிடித்தமான முறையில் கட்டுவதை காட்டிலும் வாஸ்து முறையில் வீடு கட்டுவது அவசியமாக கருத படுகிறது.

அப்படி கட்டினால் தான் வீட்டில் குடியேறிய பிறகு பல பிரச்சனைகளில் இருந்து நம்மால் தப்பிக்க முடியும். மேலும் வீடு காட்டும் பொழுது நாம் ஜாதகம் பார்ப்பது உண்டு.

அப்படியாக வீட்டில் உள்ள மனைவியின் ஜாதகம் பார்த்து வாங்கினால் இன்னும் சிறந்ததாக அமையும்.

ஏனென்றால் வீட்டில் முழு நேரம் இருக்க போகிறது மனைவி தான்.அடுத்தபடியாக பூமி பெண்ணிற்கு சமம் ஆதலால் மனையே மனைவியின் பெயரில் இருப்பது இன்னும் சிறந்தது.

வீடு கட்டுபவர்கள் அவசியம் அறிய வேண்டிய வாஸ்து தகவல்கள் | Vastu Tips Home Astrology Horoscope

மேலும் வீடு கட்டிய பிறகு வாஸ்து சரி இல்லை என்றால் சிறந்த வாஸ்து வல்லுநர்கள் பாதிப்படைந்த பகுதியை பார்த்து அதற்கேற்ற ஆலயங்களை குறிப்பிடுவர்.

அவ்வாறு இறைவனை சரணாகதி அடையும் பட்சத்தில் விரைவில் வாஸ்துபடி திருத்தங்கள் ஏற்படும் அல்லது நல்ல வாஸ்து பலம் உள்ள வீடு அமைந்திடும்.

நல்லவர்கள் ஒன்று சேர்வது கடினம் ஏன்? பகவான் கிருஷ்ணர் சொல்லும் பதில்

நல்லவர்கள் ஒன்று சேர்வது கடினம் ஏன்? பகவான் கிருஷ்ணர் சொல்லும் பதில்


அடுத்த படியாக வீட்டில் உள்ள பூஜை அறை மிகமுக்கியமாக கருதப்படுகிறது.பூஜை அறை என்பது வீட்டில் நிகழக்கூடிய ஒவ்வொரு நல்ல விஷயங்களுக்கும் முக்கிய பங்கு வகிக்கும்.

ஆகையால் பூஜை அறை என்பது கிழக்கை பார்த்து அமைத்தல் மிக சிறந்தது. அதுவும் தென்கிழக்கு பகுதியில் பூஜை அறையை அமைப்பது மிகப்பெரிய நேர்மறை ஆற்றலை கொடுக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US