கெட்ட காலம் தொடங்கி விட்டதற்கான அறிகுறிகள்- இந்த விஷயங்களில் கவனமாக இருங்கள்

By Sakthi Raj Jun 24, 2025 11:30 AM GMT
Report

 ஒரு மனிதனுக்கு கெட்ட நேரம் வந்து விட்டால் அது அவன் வாழ்க்கையை புரட்டிப்போட்டு விடும். அப்படியாக, அவனுக்கு கெட்ட காலம் தொடங்கி விட்டது என்பதற்கான சில அறிகுறிகள் உள்ளது. அந்த சமயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரங்கள். அதை பற்றிப் பார்ப்போம்.

எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபட பகவத் கீதை சொல்லும் வழிகள்

எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபட பகவத் கீதை சொல்லும் வழிகள்

1. கெட்ட காலம் நெருங்கி விட்டது என்றால் நம் வீடுகளில் உள்ள நாய் அல்லது நம் வீட்டை சுற்றி உள்ள நாய்கள் அழ தொடங்கும். இவ்வாறு நடந்தால் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும்.

2. வீடுகளில் பால் மஹாலக்ஷ்மியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. அப்படியாக, அந்த பால் அடிக்கடி தவறி கீழே விழுவதை நாம் பார்க்கமுடியும். அவ்வாறான வேளைகளில் நாம் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

3. நீங்கள் எப்பொழுதும் பொருட்களை பாதுகாப்பாக வைக்கும் நபர் என்றாலும் கெட்ட நேரம் சூழ்ந்து விட்டால் விலை உயர்ந்த நகைகள் மற்றும் பணத்தை நீங்கள் இழக்கக்கூடும். இது நாம் சந்திக்க இருக்கும் பேராபத்தை குறிக்கிறது.

4. வாஸ்து சாஸ்திரத்தின் படி ஆண்களுக்கு இடது கண்ணும், பெண்களுக்கு வலது கண்ணும் துடிப்பது அசுபமாக கருதப்படுகிறது. இவை நடக்க இருக்கும் பிரச்சனையின் பதட்டம் காரணமாக உணர்த்தும் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

5. அதே போல் இரவு சரியான தூக்கம் இல்லாமல் பாதிக்கப்படும். சமயங்களில் இதுவும் பிரச்சனைகளை குறிக்கும் அறிகுறியாகும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US