லட்சுமி பூஜை செய்யும் பொழுது மறந்தும் இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்
நம்முடைய இந்து மதத்தில் லட்சுமி தேவிக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றோம். அதிலும் குறிப்பாக லட்சுமி தேவிக்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்பான பூஜைகள் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு செய்வதுண்டு.
அவ்வாறு லட்சுமி தேவியின் வழிபாட்டை நாம் மேற்கொள்ளும் பொழுது மறந்தும் செய்யக்கூடாத தவறுகளை பற்றி பார்ப்போம். நாம் பூஜை செய்யும் பொழுது தெரியாமல் செய்யும் தவறுகள் கூட நம்முடைய குடும்பத்தில் மிக பெரிய துன்பத்திற்கு காரணம் ஆகிவிடுகிறது.
அதாவது நாம் லட்சுமி தேவிக்கு பூஜை செய்யவேண்டும் என்று நினைத்து விட்டால் வீட்டை தண்ணீர் கொண்டு நன்றாக சுத்தம் செய்து விட வேண்டும். வீடுகளில் முன்வாசல் மற்றும் பின் வாசலில் இருக்கும் குப்பைகளை அகற்றி விடவேண்டும்.
அதே போல் லட்சுமி பூஜையில் உணவு சாத்வீகமாக இருக்க வேண்டும். முதல் நாள் வீடுகளில் அசைவ உணவு எடுத்திருந்தால் அந்த பாத்திரங்களை எல்லாம் சுத்தம் செய்து வீடுகளில் சாம்பிராணி தூபம் போட்ட பிறகே விளக்கு ஏற்றி வழிபாடு செய்யவேண்டும்.
அன்றைய தினம் குடும்பத்தில் நாம் சண்டையிடக்கூடாது. பெண்களை அவமதிப்பது போல் பேசக்கூடாது. லட்சுமி தேவிக்கு எப்பொழுதும் ஒருவர் செல்வம் மீது அதிக ஆணவம் கொண்டு இருப்பது பிடிப்பது இல்லை.
ஆதலால், வருவது போவது எல்லாம் இறைவன் செயல் என்று எண்ணி தானம் வழங்கினால் லட்சுமி தேவி மனம் குளிர்ந்து நமக்கு ஆசீர்வாதம் வழங்குகிறாள். அதே போல் முடிந்த அளவு வீடுகளில் உணவுகளை வீண் செய்யாமல் இருந்தால் வீட்டில் செல்வம் தங்கும் என்பது நம்பிக்கை.
நாம் பூஜை செய்யும் லட்சுமி தேவியின் மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல் சூழ்வதைப் பார்க்க முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |