விநாயக பெருமானை வழிபடும் சரியான முறை இதுதான்

By Yashini Apr 20, 2024 07:44 AM GMT
Report

விநாயகர் இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள் ஆவார். 

இவர் கணங்களின் அதிபதி என்பதால் கணபதி என்றும், யானையின் முகத்தினைக் உடையதால் யானைமுகன் என்றும் அழைக்கப்பெறுகிறார்.

அந்தவகையில், வாழ்வில் அனைத்து செல்வங்களும் கிடைக்க விநாயகரை வழிபடும் சரியான முறைகளை பற்றி பார்க்கலாம்.

விநாயகருக்கு பூஜைகள் செய்யும் போது அருகம்புல்லும், வன்னி இலைகளும், மந்தாரைப் பூவும் அவசியம் இருக்க வேண்டும்.

விநாயக பெருமானை வழிபடும் சரியான முறை இதுதான் | Vinayagarai Vazhipadum Murai

பொதுவாக சிவபெருமானின் பூஜைக்கு உகந்த எல்லா மலர்களும் விநாயகர் வழிபாட்டுக்கு ஏற்றவைதான்.

ஆனால் தாழம்பூ, துளசி ஆகிவற்றை வைத்து மட்டும் கண்டிப்பாக வழிபட கூடாது.

விநாயகருக்கு நைவேத்தியமாக அப்பம், அவல், அமுது, அவரை, இளநீர், எள்ளுருண்டை, கரும்பு, கல்கண்டு, வள்ளிக்கிழக்கு, பொங்கல், மிளகு சாதம், தேன், தினைமாவு, நெய், பச்சரிசி, பால், வெல்லம், பணியாரம், கொழுக்கட்டை, பிட்டு, லட்டு, வடை, வெண்ணெய், விளாம்பழம், நாவல்பழம், வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், ஆகியவை வைத்து வழிபடலாம்.

விநாயகருக்கு அபிஷேக பொருளாக சந்தனாதித் தைலம், மாப்பொடி, மஞ்சள்பொடி, திரவியப்பொடி, ரசபஞ்சாமிர்தம், பழப்பஞ்சாமிர்தம், நெய், தேன், பால், தயிர், கருப்பஞ்சாறு, இளநீர், சந்தனம், பழ ரசங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US