பெண்கள் விரைவில் மணவாழ்க்கை பெற மந்திரம்
திருமணம் என்பது வாழ்க்கையில் மிக பெரிய பந்தம்.அந்த பந்தம் ஆரம்பிக்க நிறைய தடைகளை பல பெண்கள் சந்தித்து கொண்டு இருக்கின்றனர்.
உண்மையில் எல்லா தடங்களுக்கும் ஒரு மிக பெரிய முற்று புள்ளி வைக்க இறைவழிபாடு உதவியாக இருக்கும்.அப்படியாக திருமணம் தாமதம் ஆகும் பெண்கள் வெள்ளிக்கிழமைதோறும் குத்துவிளக்கினை ஏற்றி கிழக்கு முகமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
விளக்கிற்கு மல்லிகை மலர் சாத்தி குங்குமத்தினால் அர்ச்சனை செய்தபடி வலிமை பெற்ற கீழ்க்கண்ட சுலோகத்தை 108 தடவைகள் வீதம் வெள்ளிக்கிழமை தோறும் 48 வாரம் விடாமல் கூறி வழிபட வேண்டும்.
ஓம் யோகினி யோகினி யோகேஸ்வரி யோவ சங்கரீ ஸகல ஸ்தவர
ஐங்கமஸ்ய சமூகே மம உத்வாஹம்
சீக்ரம் குரு குரு க்லிம் ஸ்வயம் வராணய நம
இம்மந்திரத்தை 108 முறைகள் கூறி விளக்குப் பூஜை செய்து வழிபாடு நிகழ்த்திய பின் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள் , குங்குமம் , தாம்பூலம் தந்து ஆசி பெற வேண்டும்.
இப்படி செய்து வர விரைவில் திருமணம் நிச்சயம் ஆகும்.எதை செய்தாலும் மனதார பரிபூர்ணமாக இறைவனை நம்பி ஒரு செயலை செய்ய கண்டிப்பாக அது நடக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |