இந்த ராசியினர் சுய தொழில் ஆரம்பிச்சா வெற்றி நிச்சயம்.... உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்பவடையில் ஒருவருடைய பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் நிதி நிலையில் பாரிய தாக்கத்தை கொண்டிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் குறிபிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் எவ்வளவு காலம் மற்றவர்களின் கீழ் வேலை செய்தும் அடைய முடியாத அளவுக்கு பாரிய நிதி வளர்ச்சியை சொந்த தொழில் ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே அடைந்துவிடுவார்கள்.
அப்படி மற்றவர்களை வியக்க வைக்கும் வகையில் சொந்த தொழிலால் மட்டுமே வாழ்வில் வெற்றிகளை குவிக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம் : மேஷ ராசியை சேர்ந்தவர்கள் பிறப்பிலேயே சிறந்த தலைவர்களாக இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களின் கீழ் தொழில் புரியும் போது அவர்களால் அடைய முடியாத இலக்குகளை சொந்த தொழிலில் மட்டுமே அடைவார்கள்.
இவர்கள் சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருப்பார்கள். இவர்கள் சொந்தமாக தொழில் ஆரம்பித்தால், இவர்களின் வளர்ச்சி நிச்சயம் அசுர வளர்ச்சியாக இருக்கம்.
இவர்கள் இயல்பிலேயே மிகவும் தைரியமானவர்கள், சுறுசுறுப்பானவர்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்வதை விரும்புவார்கள். போட்டி நிறைந்த வாழ்க்கைக்கு ஏற்ற குணங்கள் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
சிம்மம் : சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இவர்களிடம் இயல்பாகவே தலைமைத்தவ பண்புகள் நிறைந்திருக்கும்.
இவர்களின் வலுவான ஆளுமை மற்றவர்களை எப்போதும் ஈர்க்கும் வகையில் இருக்கும். அவர்கள் தலைமை பொறுப்பை ஏற்றால் வெற்றிகளை குவிக்காமல் ஓயவே மாட்டார்கள்.
இவர்களுக்கு மற்றவர்களின் தலைமையில் தொழில் செய்வது மிகுந்த மன அழுத்தத்தை கொடுக்கும். அதுவே அவர்களின் நிர்வாகத்தில் சொந்த தொழிலை ஆரம்பித்தால் மற்றவர்களை வியப்படைய செய்யும் வகையில் நிதி ரீதியில் வளர்ச்சியடைவார்கள்.
கன்னி : கன்னி ராசியில் பிறந்தவர்கள் புத்திக்கூர்மையின் அதிபதியான புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இயல்பாகவே உலகத்து அறிவு மற்றும் நிதி முகாமைத்துவ அறிவு சற்று அபரிமிதமாக இருக்கும்.
இவர்களின் பகுப்பாய்வு திறன் தான் இவர்கள் தொழிலில் சிறந்து விளங்க பெரிதும் துணைப்புரிகின்றது. இவர்களிடம் காணப்படும் நிதி சாந்த தெளிந்த அறிவு இவர்களை சிறந்த தொழிலதிபர்களாக உலகறியச்செய்யும்.
இவர்களின் புத்திசாலித்தனம், பேச்சு, ஆகியன இவர்களை வியாபாரத்தில் சிறந்தவர்களாக ஆக்குகின்றது. இவர்கள் சொந்த தொழிலை ஆரம்பிக்கும் பச்சத்தில் நிச்சயம் அசுர வளர்ச்சி காண்பார்கள்.