ஜென்ம பகை ராசிகள் யார்? இவர்கள் பேசினாலே சண்டைதான் வருமாம்
ஒவ்வொரு ராசிக்கும் பொருத்தமான மற்றும் பொருத்தமற்ற ராசிகள் என ஜோதிடத்தில் உள்ளது. இதைத்தான் நமது ஜோதிடத்தில் ஜென்ம பகைராசிகள் என்று சொல்கிறார்கள். அதாவது இவர்கள் பேசினாலே இருவருக்கும் சண்டை வரும்.
இதை நாம் இயல்பாகவே நம்மை சுற்றிலும் நெருக்கமானவர்களுடைய ராசியுடன் பொருத்திப் பார்க்க முடியும். அந்த வகையில் எந்த ராசியினருடன் எந்த ராசி பேசினால் சண்டை வரும் என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷம்- மீனம்:
இவர்கள் இருவரும் பேசினால் சண்டை அதிகமாக வரும். அதாவது இவர்கள் இரண்டு பேருக்கும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாததால் அதிக அளவில் சண்டை இட்டு கொள்கிறார்கள்.
ரிஷபம்- கும்பம்:
இவர்கள் இருவரும் பிடிவாதத்தில் அதிகமான வலிமை கொண்டவர்கள். ஆதலால் இரண்டு பேரும் பேசினால் உலகப்போர் போல் சண்டையிட்டு கொள்வார்கள்.
மிதுனம்- கன்னி:
இவர்கள் பேச ஆரம்பித்தாலே விவகாரத்தில் தான் முடிகிறது. இதற்கு முடிவே இருக்காது.

கடகம்- மகரம்:
இவர்கள் உணர்ச்சியும் அதிக அக்கறையும் இருப்பதால் இவர்களுக்கு நிறைய சந்தேக கண்ணோட்டங்கள் வர துவங்கி சண்டையில் முடிகிறது.
சிம்மம்- விருச்சிகம்:
இவர்கள் மோதி கொண்டால் இவர்களுடைய ஈகோ இவர்கள் இரண்டு நபரின் யார் பெரியவர் என்ற அடித்துப் பார்க்கும் அளவிற்கு ஒரு சண்டையை தூண்டி விடுகிறது.
துலாம்-தனுசு:
இவர்கள் அமைதியாக இருந்தாலும் இவர்களின் வாய் அமைதியாக இருக்காது இவர்களின் யார் பெரியவர்கள் என்று சண்டை இட்டு பார்த்து இவர்கள் ஒரு வழியாகி விடுவார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |