பூஜையில் தேங்காய் உடைப்பது ஏன் தெரியுமா?
இந்து மாதத்தில் கோவில்களில், வீட்டில் பூஜைகளில் கடவுள்களுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம்.
முன்னோர் காலத்தில் இருந்து பூஜைகளில் தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது.
பொதுவாக தேங்காயின் மேல் கடுமையான ஓடும், அதற்குள் மென்மையான காய்ப்பகுதியும், அதனுள் நீர் இருக்கும்.
வெளியே இருக்கும் உருண்டையான ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இது உலகத்தை குறிப்பது ஆகும்.
உள்ளே உள்ள வெண்ணிறமான காய்ப்பகுதி பரமாத்மாவை குறிக்கும்.
அதற்குள் இருக்கும் இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது.
ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோன்று வெள்ளை காய்ப்பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறைகிறது.
ஈசுவர சன்னிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தைக் காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.
இவ்வளவு உட்கருத்துகள் இருப்பதால்தான் தேங்காயை இறைவழிபாட்டில் வைத்து வழிபடுகிறோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |