நீங்கள் பிறந்த தமிழ் மாதப்படி நீங்கள் எப்படிப்பட்டவர் தெரியுமா?
ஜோதிட ரீதியாக ஒவ்வொருவர் பிறந்த மாதத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அப்படியாக, எந்த மாதத்தில் பிறந்தவர்களின் என்ன குணாதிசயம் கொண்டு இருப்பார்கள் என்று பார்ப்போம்.
சித்திரை:
இவர்களை எதற்கும் பயம் கொள்ள மாட்டார்கள் அஞ்சாத நெஞ்சம் உள்ளம் உடையவர்கள்.
வைகாசி:
மிகவும் அமைதியானவர்கள். யார் வம்புக்கும் போக மாட்டார்கள்.
ஆனி:
மிகவும் ஜாலியான டைப்பாக இருப்பார்கள். இவர்கள் ஒரு இடத்தில் இருந்தாலே கலகலப்பாக இருக்கும்.
ஆடி:
இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். எளிதில் இவர்களுடைய மனம் காயப்படும்.
ஆவணி:
இவர்கள் மிகுந்த உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள். எதையும் ஆராய பக்குவம் இருக்கும்.

புரட்டாசி:
மிகவும் அன்பான மனமும் பிடிவாத குணமும் அதிகம் இருக்கும்.
ஐப்பசி:
எதையும் சாதிக்க பிறந்தவராக இருக்கிறார். இவர்களிடம் ஏதாவது ஒரு கலை இருக்கும்.
கார்த்திகை:
தன்னை சுற்றி இருப்பவர்களை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
மார்கழி:
தன்னை நேசிக்கக் கூடிய உறவுகளிடம் எப்போது உண்மையாக இருப்பார்கள்.
தை:
அழகான மனசு மற்றும் யாரையும் காயப்படுத்த மாட்டார்கள்.
மாசி:
இவர்கள் மிகவும் கோபக்காரர்கள். யாராவது நடிப்பதை பார்த்தல் இவர்களுக்கு பிடிக்காது.
பங்குனி:
புத்திசாலித்தனமும் போராட்டமும் இவர்களிடம் அதிகம் இருக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |