வைகாசி விசாகம் 2025: அன்று வீடுகளில் செல்வம் சேர வாங்கவேண்டிய 10 பொருட்கள்
முருகப்பெருமானின் விஷேசமான தினங்களில் இந்த வைசாகி விசாகம் முதல் இடத்தை பிடிக்கிறது. மேலும் வைகாசி விசாகம் அன்று தான் முருகப்பெருமான் அவதரித்தாக புராணங்கள் சொல்கிறது. அதனால் அன்றைய தினம் நாம் வீடுகளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் முருகப்பெருமானின் அருள் கிடைத்து வாழ்க்கையில் முன்னேற்றம் பெறலாம்.
அதோடு, முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாகம் அன்று நம்முடைய குடும்பங்களில் செல்வம் பெறுக வீடுகளில் வாங்க வேண்டிய முக்கியமான பொருட்களை பற்றி பார்ப்போம்.
வைகாசி விசாகம் அன்று முடிந்தவர்கள் கட்டாயம் முருகன் ஆலயம் சென்று வழிபாடு செய்வது அவர்களுக்கு வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும்.
முடியாதவர்கள் வீடுகளில் இருந்தபடியே விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்யலாம். அதோடு முருகனின் மந்திரங்கள் சொல்லி வழிபாடு மேற்கொள்ளும் பொழுது நமக்கு வாழ்க்கையில் உண்டான தோஷங்கள் விலகுகிறது.
அன்றைய தினம் மாலை வேளையில் கல் உப்பு, துவரம் பருப்பு,நாட்டுச் சர்க்கரை குரு அம்சம்,வெள்ளை சர்க்கரை சுக்கிர அம்சம், பால், பூஜை பொருட்கள் குறிப்பாக சந்தனம், பச்சை கற்பூரம், ஏலக்காய், விரலி மஞ்சள், கிராம்பு, இந்த பொருட்களை வாங்குவது நம்முடைய வீட்டில் செல்வச்செழிப்பை உண்டு செய்வதோடு முருகன் அருளால் வீடுகளில் பொருளாதாரம் முன்னேற்றம் பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |