ஜாதகத்தில் 5-ல் குரு இருப்பவர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

By Sakthi Raj Jun 04, 2025 09:30 AM GMT
Report

ஜோதிடம் என்பது மிக பெரிய கடல். அதாவது 12 ராசிகளும் 27 நட்சத்திரங்களும் 9 கிரகங்களும் வைத்து நாம் ஒருவர் வாழ்க்கையை கட்டாயம் கணித்து விட முடியும். அதாவது, அவர்கள் பிறப்பின் ரகசியம், வாழ்க்கையின் தேடல் இவை அனைத்தையும் நாம் ஜாதக கட்டம் வைத்து சொல்லிவிடலாம்.

அந்த வகையில் ஒருவர் ஜாதகத்தில் 5ல் குரு அமர்ந்து இருந்தால் அவருக்கு குழந்தை பிறப்பதில் தாமதம் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது. அவ்வாறு 5-ல் குரு இருந்து தற்பொழுது திருமணம் ஆகி குழந்தை பிறப்பதில் சிக்கலை சந்திப்பவர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி பார்ப்போம்.

ஜாதகத்தில் 5-ல் குரு இருப்பவர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் | Parigram For Who Is Having Struggle Having Babies

இவர்கள் 27 கொண்டைக்கடலை எடுத்து கொண்டு அதை ஒன்பது மஞ்சள் துணியில் அதாவது ஒரு துணிக்கு 3 கொண்டக்கடலை என்ற வீதம் வைத்து முடித்து கொள்ள வேண்டும். பிறகு அவர்கள் அதை பூஜை அறையில் வைத்து விடவேண்டும்.

இந்த பரிகாரத்தை அவர்கள் கட்டாயம் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இருக்கும் பொழுது தான் செய்யவேண்டும். பிறகு, பரிகாரத்தை மேற் கொள்ளும் இரவு அன்று பூஜையறையில் உள்ள ஒரு முடிச்சை எடுத்து கணவன் மனைவி இருவரும் தங்கள் படுக்கையில் ஒரே தலையணையின் கீழ் வைத்து உறங்க வேண்டும்.

56 அடி உயர சிவலிங்கத்திற்குள் கோவில்-எங்கு இருக்கிறது தெரியுமா?

56 அடி உயர சிவலிங்கத்திற்குள் கோவில்-எங்கு இருக்கிறது தெரியுமா?

மறுநாள் காலையில் எழுந்தவுடன் மனைவி கை, கால்களை கழுவி விட்டு இரவு தலையணைக்குக் கீழ் வைக்கப் பட்ட முடிச்சை எடுத்து, தனது இரண்டு உள்ளங்கைக்குள் வைத்துக் கொண்டு குரு பகவானை மனதார வழிபாடு செய்து தங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

ஜாதகத்தில் 5-ல் குரு இருப்பவர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் | Parigram For Who Is Having Struggle Having Babies

பின்னர் பயன்படுத்திய அந்த முடிச்சை தனியாக பத்திரப்படுத்திவைக்க வேண்டும். இதேபோல் ஒன்பது முடிச்சுகளையும் தொடர்ச்சியாக வரும் இரவுகளில் செய்ய வேண்டும். 10-ஆவது நாள் காலையில் கணவன் மனைவி இருவரும் அதிகாலையில் குளித்து விட்டு, ஒன்பது முடிச்சுகளையும் யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று ஓடும் தண்ணீரில் விடவேண்டும்.

கட்டாயம்கிணற்றுநீர், ஊருணி நீர் நிலைகளில் போடக் கூடாது. இந்த பரிகாரத்தை மனதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் முழு நம்பிக்கையோடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய நிச்சயம் குரு பகவானின் அருளால் ஆரோக்கியமான மற்றும் அறிவான குழந்தை பிறக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US