2025 அக்டோபர் விலகும் சனி தோஷம்- இந்த 3 ராசிகளுக்கு மிக பெரிய ராஜ யோகம் காத்திருக்கிறதாம்

By Sakthi Raj Sep 30, 2025 11:50 AM GMT
Report

  2025 அக்டோபர் மாதம் சனி பகவான் வக்ர பெயர்ச்சியில் இருந்து சாதாரண நிலைக்கு செல்வதால் பல தோஷங்கள் இதனால் விலகுவதாக சொல்கிறார்கள். இந்த மாற்றம் குறிப்பாக ஒரு சிலருக்கு மிக பெரிய ராஜ யோகத்தை கொடுக்க போவதாக சொல்கிறார்கள். அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.

சரஸ்வதி பூஜை அன்று சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த 3 மந்திரங்கள்

சரஸ்வதி பூஜை அன்று சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த 3 மந்திரங்கள்

மகரம்:

மகர ராசியினருக்கு ஏழரை சனியின் காலம் முடிவிற்கு வருகிறது. இவர்களுக்கு 2025 அக்டோபர் மாதம் சனி வக்ர பெயர்ச்சியில் இருந்து வெளியே செல்வதால் இவர்களுக்கு சனியால் ஏற்பட்ட அனைத்து தோஷமும் விலகும். இந்த காலகட்டத்தில் இவர்கள் இழந்த அனைத்து செல்வதையும் மீட்டு கொள்வார்கள். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் உள்ள நபர்களின் ஆரோக்கியம் மேம்படும்.

கும்பம்:

கும்ப ராசிக்கு அஷ்டம சனி விலக உள்ளது. கும்ப ராசியினர் அஷ்டம சனியால் பல வகையில் பாதிப்புகளை சந்தித்து வந்தார்கள்.அவை அனைத்தும் மாறி நல்ல முன்னேற்றம் பெற்று எல்லா வளமும் பெறப்போகிறார்கள். அதாவது இந்த காலகட்டத்தில் இவர்கள் இழந்த அனைத்து செல்வத்தையும் தேடி பெற போகிறார்கள். குடும்பத்தில் சண்டை மன கசப்புகள் எல்லாம் விலகி நன்மை பெற உள்ளார்கள். மேலும் இவர்களுக்கு இந்த காலகட்டத்தில் வெளிநாடு வெளியூர் செல்லும் யோகம் கிடைக்கும்.

துலாம்:

துலாம் ராசிக்கு கண்டக சனி அகல உள்ளது. இவர்கள் இந்த காலகட்டத்தில் பொன் பொருள் சேர்க்கை பெற்று மகிழ்ச்சியாக வாழ போகிறார்கள். தொழில் ரீதியாக இவர்கள் நல்ல வளர்ச்சியை பெறப்போகிறார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவி இடையே உண்டான மன கசப்புகள் எல்லாம் விலகி நன்மை பெறுவீர்கள். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது. எதிர்பாராத அதிர்ஷ்டம் இவர்களை தேடி வர உள்ளது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US