2026: சூரிய கிரகணத்தன்று செவ்வாய் பெயர்ச்சி..3 ராசிகளுக்கு ஆபத்து காத்திருக்கிறதாம்
2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் ஒரு சில ராசிகளுக்கு எதிர்மறையான தாக்கங்கள் வரக்கூடும் என்று சொல்லப்படுகிறது. அதை நாளில் செவ்வாய்பெயர்ச்சி நடப்பதால் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
அதாவது திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஆகஸ்ட் 12 இரவு 10:42 மணிக்கு செவ்வாய் கிரகம் திருவாதிரை நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். இதனால் ஒரு சில ராசிகள் தேவை இல்லாத மன அழுத்தம் போன்ற நிலையில் சிக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு வேலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலையால் சில மன அழுத்தங்கள் வரலாம். ஒரு சிலருக்கு திடீர் உடல் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும். மருத்துவச் செலவுகள் வருவதால் மன நிம்மதி இழப்பதற்கான வாய்ப்புகள் உண்டு
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மனரீதியாக நீங்கள் ஒரு சில சங்கடங்களை சந்திப்பீர்கள். குடும்பத்தினரிடம் தேவையில்லாத வாக்குவாதம் பிரச்சனைகளை வைத்துக் கொள்ள வேண்டாம். காது தொடர்பான விஷயங்களை மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
தனுசு :
கூட்டு தொழிலில் இருப்பவர்கள் சற்று விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். எந்த ஒரு விஷயத்தையும் நிதானமாக யோசித்து செயல்படும் பொழுது அதில் நீங்கள் வெற்றி பெறலாம். பூர்விக சொத்துக்களால் சில மன சங்கடங்களை சந்திப்பீர்கள். பொன் பொருள் போன்ற விஷயங்களை நீங்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் ஒரு நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய காலகட்டமாகும். எந்த ஒரு வியாபாரம் ஒப்பந்தத்தில் கையெழுத்து விடுவதற்கு முன்பாக நீங்கள் மிகுந்த எச்சரிக்கையோடு செய்வது அவசியமாகும். கடன் வாங்குவதை தவிர்த்தால் மட்டுமே இந்த காலகட்டங்களில் நீங்கள் தப்பிக்கலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |