முடிவிற்கு வருகிறது ராகு கேது ஆட்டம்..பொற்காலம் பெறும் 3 ராசிகள் யார்?
ஜோதிடத்தில் ராகு கேது நிழல் கிரகமாக கருதப்படுகிறார். அந்த வகையில், ராகு பகவான் தற்பொழுது கும்ப ராசியில் இருக்கிறார். கேது சிம்ம ராசியில் உள்ளார். அதே நேரத்தில் சூரியன் மிதுன ராசியிலும், சந்திர பகவான் கடக ராசியிலும் செவ்வாய் ரிஷப ராசியிலும், புதன் மிதுன ராசியிலும் இருக்கிறார்கள். அதோடு குரு பகவான் கடக ராசியிலும், சுக்கிரன் சிம்ம ராசியிலும், சனி மீன ராசியிலும் இருக்கிறார்.
இந்த கிரகங்கள் எல்லாம் ராகு கேதுவுக்கு இடையில் மாட்டிக்கொண்டு இருந்தது. அந்த வகையில், ஜூலை 19ஆம் தேதி சந்திரன் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் ராகு கேதும் பிடி விலகுகிறது. இதனால் மூன்று ராசிகளுக்கு இன்று முதல் பொற்காலம் ஆரம்பமாகிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.

கடகம்:
ராகு கேது விலகிய பிறகு இவர்களுக்கு நினைத்த காரியங்கள் நடக்கும். மனதில் இருந்த விரக்தியான நிலைமை விலகும். போராட்டமான நிலையில் இருந்தவர்களுக்கு அதிலிருந்து மீண்டு வரக்கூடிய யோகம் பிறக்கும். கல்வியில் சாதகமான சூழ்நிலையை பெறுவீர்கள். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.
மிதுனம்:
இவர்களுக்கு இந்த காலகட்டம் சுப பலன்களை கொடுக்கப் போகிறது. ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் விலகும். இருப்பினும் இவர்களின் செயல்பாடுகளை மற்றும் சற்று கவனம் செலுத்த வேண்டும். புதிய இடத்திற்கு சென்று நேரம் செலவிட வேண்டாம். சுயமாக முடிவெடுத்து முன்னேற்றம் பெறக்கூடிய நாள்.
மீனம்:
மீனம் இவர்களுக்கு இந்த காலகட்டம் தேவையில்லாத அலைச்சல் உண்டாகலாம். உறவினர்களுடைய ஒத்துழைப்பால் இவர்கள் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள். கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகளை தகர்த்து வெற்றி பெறுவீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |