2026: சித்ரா பௌர்ணமி அன்று என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது?
ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பௌர்ணமி மிகவும் விசேஷம் வாய்ந்தவை. அதிலும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி ஆன்மீக ரீதியாக கூடுதல் விசேஷம் நிறைந்ததாகவும் அன்றைய நாள் நம் செய்யக்கூடிய வழிபாடு இரட்டிப்பு பலன்களை கொடுக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
அதாவது மனிதர்கள் அன்றாட வாழ்க்கையில் ஏதேனும் தவறுகளை செய்து விடுவது வழக்கம். இவ்வாறு நாம் செய்யக்கூடிய தவறுகளை சித்திரகுப்தர் கணக்குகளை போட்டு எழுதி வைத்துக் கொள்வார். நாம் இறந்த பிறகு அதை எமதர்மராஜாவிடம் கொடுத்து அதற்குரிய தண்டனையை வாங்கி கொடுப்பார்.
சித்ரா பௌர்ணமி சித்திரகுப்தர் பிறந்த தினம் என்பதால் நாம் செய்யக்கூடிய பாவங்களில் இருந்து விடுபட சித்ரகுப்தரை மனதார வழிபாடு செய்து மனதார உணர்ந்து அந்த தவறுக்கு மன்னித்து அருளும் பணி வேண்டினால் நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மேலும், பௌர்ணமி என்பது சித்தர்கள் அனைவரும் சங்கமிப்பார்கள் என்று ஒரு கருத்து உண்ட. ஆதலால் இந்த பௌர்ணமியில் சித்தர்களை வழிபாடு செய்வதும் மிகப் பெரிய அளவில் பலனை கொடுக்கும். அப்படியாக சித்ரா பௌர்ணமி அன்று என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி முழுமையாக பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |