மற்றவர்கள் காலில் இந்த ராசிகள் கட்டாயம் விழக்கூடாதாம்.. ஏன் தெரியுமா?
நம்முடைய இந்து மத மரபில் பெரியவர்களிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவது என்பது ஒரு மரமாகவே கடைப்பிடித்து வருகின்றோம். அதாவது பெரியவர்களுடைய அல்லது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவது என்பது நம் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் கொடுக்கும் என்பது நம்பிக்கை.
இருப்பினும் ஜோதிட ரீதியாக ஒரு சிலர் ஒருவருடைய காலில் விழக்கூடாது என்று சொல்லப்படுகிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம். 27 நட்சத்திரங்களில் உத்திரட்டாதி, அனுஷம், பூசம் என சனி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் யாரும் பிறருடைய காலில் விழக்கூடாது.

அது போன்று பிறர் இவர்கள் கால்களில் விழுவதையும் தவிர்த்துக் கொள்வது நல்லது. அதேபோல், மகரம், கும்பம் ராசியில் பிறந்தவர்களும் கும்பம் மகர லக்னத்தில் பிறந்தவர்களும் மற்றவர் கால்களில் விழுவதோ அல்லது மற்றவர் உங்கள் காலில் விழுவதும் கூடாது.
இந்த ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனி பகவானுடைய ஆதிக்கத்தை அதிகம் கொண்டவர்கள். இவர்கள் பிறர் கால்களில் விழுவதை காட்டிலும் தாய் காலில் தொட்டு வணங்கும் பொழுது இவர்களுக்கு எண்ணற்ற பலன்கள் கிடைக்கிறது.

இவர்கள் தாயை மகிழ்ச்சியாக வைக்கின்ற பொழுது இவர்களுக்கு சனி பகவான் கேட்டதையெல்லாம் கொடுக்கக் கூடியவராக இருக்கிறார். இவர் தாய் தந்தையை தவிர பிறருடைய கால்களில் விழுவதை தவிர்த்துக் கொள்ளலாம்.
இவர்கள் மற்றவர் காலில் விழும் பொழுது அவர்கள் ஜாதகத்தில் உள்ள புண்ணிய பலன் குறையும் என்று சொல்லப்படுகிறது. காரணம் சனி பகவானுக்கு உரிய பகுதி பாதம் என்பதால் இவர்களுக்கு கர்மபலனைக் கொடுக்கக்கூடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |