ஒரு கிராமமே பெருமாளுக்காக உழைக்கும் அற்புத நிகழ்வு எங்கு தெரியுமா?
இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் திருப்பதி ஏழுமலையான் கோயிலும் ஒன்று. இங்கு பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள். அப்படியாக, திருப்பதி ஏழுமலையானை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 சுவாரசிய விஷயங்களை பற்றி பார்ப்போம்.
1) திருப்பதி பெருமாளுக்கு சாற்றப்படும் பூ, அபிஷேகப்பால், நெய், மோர், தயிர், துளசி இலைகள் இவை அனைத்தும் ஒரு கிராமத்தில் இருந்து மட்டுமே கொண்டு வரப்படுகிறது. அதாவது, அந்த கிராமம் பெருமாளுக்காக மட்டுமே வேலை பார்க்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது. இந்த கிராமம் திருப்பதியில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு கோயில் அர்ச்சகர் தவிர்த்து பொது மக்கள் யாரும் அனுமதிப்பதில்லை.
2) இங்கு பெருமாள் உருவத்தில் பாதிக்கப்பட்டு இருக்கும் முடி உண்மை என்று சொல்லப்படுகிறது. அதாவது, பெருமாள் பூமிக்கு வந்த பொழுது போர்க்களத்தில் அவருடைய சில முடிகளை இழந்து உள்ளார்.
அதை அறிந்த கந்தர்வ பேரரசு நீலாதேவி மிகவும் வருத்தம் கொண்டு, அவருடைய கூந்தலை அறுத்து பெருமாளின் சிலை முன்பு வைத்து அதை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொண்டார். பிறகு அதை ஏற்று கொண்ட பெருமாள் அவரின் தலையில் சூடிக்கொண்டதாக சொல்லப்படுகிறது. அதனால், திருப்பதிக்கு வரும் பக்தர்கள் இன்றளவும் முடியை காணிக்கையாக பெருமாளுக்கு கொடுப்பதாக ஐதீகம்.
3) திருப்பதி கோயிலில் பெருமாளுக்கு சாற்றப்படும் மலர்கள் மறுநாள் காலை சுத்தம் செய்து அர்ச்சகர்கள் வெளியில் எங்கும் போடுவதில்லை. மாறாக கோயிலின் பின்பக்கத்தில் அமைந்துள்ள அருவியில் கொட்டுகின்றனர். பிறகு அந்த பூக்கள் யார் கண்களுக்கும் தென்படாமல் கோயிலில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் எர்பேடு என்ற கிராமத்திற்குச் சென்று தேங்கி நிற்பதாக சொல்கிறார்கள்.
4) மிக முக்கியமாக திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் பச்சை கற்பூரம் சாற்றுகிறார்கள். இந்த பச்சை கற்பூரம் ரசாயனம் ஆகும். இதை சாதாரண பாறையில் தடவினால் கூட அந்த கல் வெடித்து விடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப் பாறைகள் வெடிப்பதில்லை. இங்கு பெருமாளுக்கு ஒரு நாள் தவறாமல் சாற்றுகிறார்கள் இருப்பினும் வெடிப்பு எதுவும் இல்லை என்கிறார்கள்.
5) இன்னொரு சிறப்பம்சமாக ஏழுமலையானுக்கு அபிஷேகத்திற்கு ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரிசில் இருந்து வாசனை திரவியங்கள் வருகின்றன. இவை அனைத்தும் பெருமாளுக்கு ஒரு தங்க தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |