கடன் பிரச்சனையை தீர்க்க சொல்லவேண்டிய எளிய மந்திரம்

By Yashini May 26, 2025 07:16 AM GMT
Report

கடன் பிரச்சனை என்பது சிலருக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை. தங்கள் வாழ்வில் சிலர் கடனை அடைப்பதற்காக கடுமையாக முயற்சி செய்வார்கள்.

ஆனால் எவ்வளவு முயன்றாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் கடனை அடைக்க முடியாமல், கடன் பிரச்சனையுடன் போராடிக் கொண்டிருப்பார்கள். 

அந்தவகையில், கடன் தொல்லை உதவும் எளிய ஸ்லோகம் குறித்து பார்க்கலாம். இந்த மந்திரத்தை தேய்பிறை நாட்களில் ஆரம்பிப்பது என்பது மிகவும் சிறப்பு.

தேய்பிறையில் பிரச்னைகள் தீர்வதற்கான வழிபாட்டை செய்தால் நிலவு தேய்வது போல நம்முடைய பிரச்னைகளும் தேய்ந்து கொண்டே போகும் என்று கூறப்படுகிறது. 

கடன் பிரச்சனையை தீர்க்க சொல்லவேண்டிய எளிய மந்திரம் | A Simple Slogan To Solve The Debt Problem

இந்த மந்திர உச்சாடனத்தை காலையில் எழுந்ததும் கூறலாம் அல்லது இரவு படுக்கச் செல்வதற்கு முன் கூறலாம்.

காலையில் எழுந்ததும் கூறுபவர்களாக இருக்கும் பட்சத்தில் முகம், கை, கால்களை கழுவிக்கொண்டு பல் துலக்கி விட்டு இந்த மந்திரத்தை சொல்லலாம்.

இந்த மந்திரத்தை சொல்பவர்களாக இருக்கும் பட்சத்தில் அசைவம் சாப்பிட்ட பிறகு இந்த மந்திரத்தை கூறக் கூடாது.

தொடர்ச்சியாக 108 நாட்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

ஒரு டம்ளர் நிறைய தண்ணீரை எடுத்து இரண்டு கைகளிலும் வைத்துக் கொண்டு கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு இந்த மந்திரத்தை 108 முறை கூற வேண்டும்.

சொல்லவேண்டிய மந்திரம்

"லலிதம் ஸ்ரீதரம்

லலிதம் பாஸ்கரம்

லலிதம் சுதர்சனம்"

இப்படி 108 முறை கூறி முடித்த பிறகு, "இந்தப் பிரபஞ்சத்திற்கு நன்றி, இந்த மந்திரத்தின் பலனால் என்னுடைய கடன் முற்றிலும் தீர்ந்துவிட்டது, அதற்கு நன்றி" என்று மனதார நன்றி கூற வேண்டும்.

பிறகு தண்ணீரை குடிக்க வேண்டும். இப்படி நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் நன்றி கூறுவதன் மூலம் அந்த பிரபஞ்சமே நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்யும் என்று கூறப்படுகிறது.

இந்த மந்திரத்தை முழு மனதோடு கூறுபவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கக்கூடிய கடன் பிரச்னைகள் அனைத்தும் நீங்கும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.   
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US