ஆடி வெள்ளியில் அம்மனுக்கு ஏன் மாவிளக்கு ஏற்றுகிறோம் தெரியுமா?

By Yashini Aug 02, 2024 07:37 AM GMT
Report

பொதுவாக, கோவில்களில் தெய்வங்களுக்கு மாவிளக்கு போட்டு வழிபடுவது என்பது மிகவும் விசேஷமான வழிபாடுகளில் ஒன்று.

ஆடி வெள்ளியில் அம்மனுக்கு மாவிளக்கு போட்டு வழிபடுவது சிறப்பான பலன்களை பெற்று தரும்.

குறிப்பாக, மாவிளக்கு ஏற்றுவதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.

ஆடி வெள்ளியில் அம்மனுக்கு ஏன் மாவிளக்கு ஏற்றுகிறோம் தெரியுமா? | Aadi Velliyil Ammanukku Maavilakku

வீட்டில் உள்ள துன்பங்கள் அனைத்தும் நீங்கி மகாலஷ்மி அருள் பரிபூரணமாகக் கிடைத்து செல்வச் செழிப்புடன் வாழ்வு அமையும் என்பது ஐதீகம்.

ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து அருள்புரிவாள்.

மாவிளக்கு ஜோதியாக ஜோதி சொரூபமாக அம்பிகை நம் இல்லங்களில் வந்து அருள்புரிவதற்காகவே மாவிளக்கு ஏற்றப்படுகிறது.

ஆடி வெள்ளியில் அம்மனுக்கு ஏன் மாவிளக்கு ஏற்றுகிறோம் தெரியுமா? | Aadi Velliyil Ammanukku Maavilakku  

இந்த மாவிளக்கு பச்சரிசி மாவையும், வெல்ல சர்க்கரை, ஏலக்காய் கொண்ட வாசனைப் பொருட்களையும் அரைத்து சேர்த்து நெய் விட்டு மாவு பிசைந்து வாழை இலையின் நடுவே விளக்கு போல் அமைக்க வேண்டும்.

மேலே குழியாக கைவிரல் வைத்து அழுத்தி விளக்குக்கு சந்தனம், குங்குமம் வைத்து அதில் நெய் ஊற்றி திரிகளை போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

ஆடி வெள்ளியில் மாவிளக்கு ஏற்றுவதால் இல்லத்தில் மகிழ்ச்சி நிலைத்து நிற்கும், ஆயுள் ஆரோக்கியத்துடன் தீராத கஷ்டங்கள் நீங்கி சந்தோஷம் நிலைக்கும்.   

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US