அதிர்ஷ்டம் தரும் ஆஷாட நவராத்திரி- அம்பிகை அருள் பெற செய்யவேண்டிய வழிபாடு

By Sakthi Raj Jun 26, 2025 07:07 AM GMT
Report

 அம்பிகைக்கு உரிய ஒரு சிறப்பான பண்டிகை தான் ஆஷாட நவராத்திரி. இந்த விழாவை வடமாநிலங்களிலே அதிக அளவில் கொண்டாடுகிறார்கள். குறிப்பாக,  தாந்திரீகம் செய்பவர்கள் இந்த ஆஷாட நவராத்திரியில் சிறப்பான வழிபாடுகள் செய்து தீய சக்திகளிடம் இருந்து விடுபட்டு தெளிவு அடைவார்கள்.

அப்படியாக, ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் வரும் ஆஷாட மாதத்தின் வளர்பிறை பிரதமை திதியில் ஆஷாட குப்த நவராத்திரி தொடங்குகிறது. இது ஒன்பது நாட்கள் தொடர்ந்து கொண்டாடும் பண்டிகை ஆகும். அந்த வகையில் 2025ஆம் ஆண்டு ஆஷாட குப்த நவராத்திரி ஜூன் 26-ல் தொடங்கி ஜூலை 4-ல் முடிவடைகிறது.

இந்த நாட்களில் நாம் துர்காதேவியை முழுமனதோடும் நம்பிக்கையோடும் வழிபாடு செய்தால் நம் வாழ்க்கையில் உள்ள பல துன்பங்களும் கவலைகளும் அம்பிகை அருளால் விலகும்.

அதோடு, இந்த நாட்களில் நாம்  துர்கா தேவிக்கு சில மங்களகரமான பொருட்களை வழங்குவதன் மூலம் நமக்கு நன்மையையும் அதிர்ஷ்டமும் கிடைக்கிறது என்கிறார்கள். அதைப் பற்றி பார்ப்போம்.

அதிர்ஷ்டம் தரும் ஆஷாட நவராத்திரி- அம்பிகை அருள் பெற செய்யவேண்டிய வழிபாடு | Ashada Navarathiri 2025 Worship In Tamil

1. இந்த ஆஷாட நவராத்திரியில் அம்பிகைக்கு செம்பருத்தி பூக்களை வைத்து வழிபாடு செய்வது நமக்கு மிகப் பெரிய வலிமை கொடுப்பதாக சொல்லப்படுகிறது. இந்து மதத்தில் சிவப்பு நிறம் வலிமை மற்றும் பக்தியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

மேலும், செம்பருத்தி பூக்களை அம்மனின் பாதத்தில் வைத்து வழிபாடு செய்வதால் அம்பாள் மனம் மகிழ்ந்து நமக்கு அருள் புரிகிறாள். அதோடு நம்மை சுற்றி உள்ள எதிர்மறை எண்ணங்கள் விலக செய்து வாழ்க்கையில் வசந்தம் உண்டாக்குகிறாள்.

2. நம்முடைய இந்து மதத்தில் தேங்காய் இல்லாமல் பெரும்பாலும் எந்த ஒரு வழிபாடுகளும் நடைப்பெறுவது இல்லை என்று தான் சொல்லவேண்டும். அதாவது தேங்காய் மிகவும் புனிதமான பொருளாக பார்க்கப்படுகிறது.

அதை ஒரு கலசத்தில் வைத்து, அதில் தண்ணீர் மற்றும் மா இலைகளை வைத்து துர்கா தேவிக்கு வழங்குவது ஒரு பாரம்பரியமான வழி ஆகும். இந்த வழிபாட்டை ஆஷாட நவராத்திரியில் செய்வதின் வழியாக நம் வீடுகளில் மகிழ்ச்சியும் வளமும் உண்டாகுகிறது. மேலும், இது தேவியை கௌரவிக்கும் ஒரு சிறந்த வழியாகும்.

உலகை ஆள வைக்கும் அமாவாசை யோகம்- உங்கள் ஜாதகத்தில் உள்ளதா?

உலகை ஆள வைக்கும் அமாவாசை யோகம்- உங்கள் ஜாதகத்தில் உள்ளதா?

3. நம் வீடுகளில் உள்ள சிக்கல்கள் உடைய அம்பாளுக்கு கிராம்பு மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை வழங்குவது சிறந்த பலனைக்கொடுக்கும். மேலும், இந்த இரண்டு வாசனை பொருட்களும் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தி, நல்ல சக்தியை வழங்குகிறது. 

இந்த ஆஷாட நவராத்திரியில் நாம் ஏலாக்காய் மற்றும் கிராம்பை அம்பிகையின்  சிலை அருகே வைத்து வழிபாடு செய்தால் குடும்பத்தில் மன அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாகும்.

4. நம்முடைய இந்து மதத்தில் குங்குமம் மற்றும் குங்கும பூ மிக சிறந்த வழிபாடாக பார்க்கப்படுகிறது. அதாவது குங்குமம் மன தூய்மையும் குங்குமப்பூ பெண் சக்தியையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் குறிக்கிறது.

 இவை இரண்டையும் நாம் அம்பிகையின் பாதங்களில் வாய்த்து வழிபாடு செய்யும் பொழுது மனம் சுத்தம் பெற்று நம்மை சூழ்ந்து உள்ள தீய கண்களும் சக்திகளும் விலகுகிறது.

5. இறுதியாக ஆஷாட நவராத்திரியில் தேங்காய் லட்டு போன்ற இனிப்புகளை வழங்குவது வளர்ச்சியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கிறது. இதை அம்பிகைக்கு வழங்குவது நம் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தையும் சந்தோஷத்தையும் கொடுக்கும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US