வாஸ்து: வீட்டில் துளசி செடி திடீரென முளைத்தால் இவ்வளவு நன்மைகளா?
இந்து மதத்தில் மிக புனிதமானது துளசியாகும்.
துளசி செடி தெய்வீகமாக கருதப்படுகிறது. இது லட்சுமி தேவியின் இணையாக கருதப்படுகிறது.
அதேபோல், துளசி இல்லாமல் மகாவிஷ்ணுவிற்கு செய்யப்படும் எந்த ஒரு பூஜையும் நிறைவு பெறாது என்பது ஐதீகம்.
வீட்டில் துளசி செடி இருக்க வேண்டும் என முன்னோர் கூறியுள்ளனர்.
வீட்டில் துளசி செடி வாடிவிட்டால் அல்லது சரியாக வளரவில்லை என்றால், வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருப்பதாக நம்பப்படுகிறது.
துளசி வீட்டில் இருந்து எதிர்மறை சக்தியை விலக்கி வைப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
எவ்வித மனித முயற்சியும் இன்றி வீட்டில் துளசி செடி திடீரென வளர்வது நல்ல அறிகுறி என கூறப்படுகிறது. இதனால் லட்சுமி தேவியின் ஆசிகள் அதிகமாக கிடைக்கும்.
ஆனால் இந்த செடி சுத்தமான இடத்தில் வளர்ந்தால் நன்மை பயக்கும்.
வீட்டில் உள்ள துளசி செடி காய்ந்து, திடீரென பச்சை நிறமாக மாறினால், பொருளாதார முன்னேற்றம் என்று கூறுகின்றனர். இது நிச்சயமாக சில நல்ல செய்திகளுக்கான அறிகுறியாகும்.
அதேபோல், துளசி செடி பூப்பதும் மங்களகரமானது. இது வீட்டில் மகிழ்ச்சி மற்றும் வளமையை கொண்டு வரும்.