வாழ்க்கை மாற ஒரு முறை அபிஷேகத்திற்கு இந்த பொருளை மட்டும் கொடுத்து பாருங்கள்
வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே போல் அமைவது இல்லை. ஒரு சிலருக்கு எல்லாம் எளிதில் கிடைத்து விடுகிறது. ஒரு சிலருக்கு மிகுந்த கால தாமதம் பிறகே கிடைக்கின்றது. இன்னும் சிலருக்கு எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் தடைகள் மேல் தடைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.
அவ்வாறு வாழ்க்கையில் விரக்தியில் தவிப்பவர்களுக்கு இறைவனை சரண் அடைவதை தவிர வேறு வழியே இல்லை. அவர்கள் வாழ்க்கை இனிமையாக இறைவனுக்கு இந்த அபிஷேக பொருட்களை மட்டும் வாங்கி கொடுத்தால் போதும் நல்லதோர் மாற்றங்களை சந்திக்கலாம். அவை என்னவென்று பார்ப்போம்.
பொதுவாகவே, நாம் இறைவனுக்கு பூஜை பொருட்கள் வாங்கி கொடுத்து வழிபாடு செய்யவதுண்டு. அதில் நாம் வாங்கிக்கொடுக்க வேண்டிய முக்கியமான பொருள் தான் தேன். இந்த ஒரு பொருளை மட்டும் கொண்டு அவர்கள் இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்யும் பொழுது அவர்கள் வாழ்க்கையே மாறுகிறது.
நிறைய கோவில்களில் பாலபிஷேகம், சந்தன அபிஷேகம், குங்கும அபிஷேகம், விபூதி அபிஷேகத்தோடு, சேர்ந்த தேன் அபிஷேகம் செய்வார்கள். அவ்வாறு இல்லாமல், முதலில் சுவாமிக்கு தண்ணீரில் அபிஷேகம் செய்த பிறகு தேனால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
பிறகு மீண்டும் இறைவனுக்கு தண்ணீர் கொண்டு அபிஷேகம் செய்து அலங்காரத்தை முடித்துவிடவேண்டும். இந்த அபிஷேகத்தை நாம் விருப்பட்ட எந்த கோயில்களிலும் செய்யலாம். அதே போல், கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு கற்கண்டை பிரசாதமாக வழங்குங்கள்.
கோயில் மரத்தடியில் இருக்கும் எறும்புகளுக்கு அந்த கற்கண்டுகளை சாப்பிட உணவாக கொடுங்கள். இவ்வாறு செய்யும் பொழுது நம்முடைய பாவங்கள் விலகுகிறது.
மனிதனுக்கு இனிமையான வாழ்க்கை காட்டிலும் எந்த சூழ்நிலையிலும் இனிமையாக நடந்து கொள்ளும் பக்குவமே தேவைப்படுகிறது. ஆதலால், இறைவன் மனம் குளிர இந்த அபிஷேகத்தை செய்யுங்கள். அவன் உங்கள் மனதை குளிர வைப்பான்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |