வீடுகளில் பிரச்சனை கடன் நெருக்கடியா ?இந்த எண்ணெயில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்
இந்த உலகத்தில் தீராத பிரச்சனை என்று ஒன்று இல்லை. அதை போல் இறைவழிபாட்டால் மாற்ற முடியாத ஒரு பிரச்சனை என்றும் ஒன்றும் இல்லை.
அந்த வகையில் ஒரு சிலருக்கு நேரம் சரியில்லை என்றால் குடும்பத்தில் பிரச்சனை மன அமைதியின்மை பொருளாதார நெருக்கடிகள், எதிரிகள் தொல்லை தெரிந்தவர்கள் கூட நமக்கு எதிராக பேசக்கூடிய நிலைக்கு கொண்டு வந்து விட்டுவிடும்.
அப்படியான நேரங்களில் மனம் தளராமல் இறைவன் ஒருவனை சரண் அடைகின்ற பொழுது இறை அருளால் நாம் அந்தப் பிரச்சினைகளை எளிதாக கடந்து செல்லலாம்.

அப்படியாக, தீபம் ஏற்றி வழிபாடு செய்வது என்பது நம்முடைய வாழ்க்கையில் கர்ம வினைகளை வெகுவாக குறைத்துக் விடும். அந்த வகையில், நீங்கள் எந்த பிரச்சினையில் இருக்கின்ற பொழுது எந்த எண்ணை கொண்டு தீபம் ஏற்ற வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
1. நீண்ட நாள் கடன் தொல்லை என்றால் நீங்கள் தேங்காய் எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்ற பொழுது அந்த கடன் தொல்லை குறைக்கிறது.

2. அதைப்போல் வீடுகளில் சண்டை மன கசப்பு எப்பொழுதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்கின்ற நேரத்தில் நீங்கள் ஆமணக்கு எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றுவது நல்ல பலனை கொடுக்கும்.
3. வீடுகளில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க பசு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது சிறந்தது.
4. எதிரிகளால் தொல்லை மற்றும் துன்பங்கள் தீர எள் எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |