பல மடங்கு பலன் தரும் இரட்டைப் பிள்ளையார் வழிபாடு

By Sakthi Raj Sep 07, 2024 10:00 AM GMT
Report

ஒரு சமயம் சிவபெருமானைப் பிரிந்து பார்வதிதேவி தனியாகத் தவம் செய்ய நேர்ந்தது. அப்போது விநாயகர் தன்னைப் போலவே ஒரு வடிவத்தை தன்னருகே உருவாக்கி, அந்தத் திருவுருவத்தையே அதாவது தன்னையே சங்கல்பம் செய்து கொண்டு, பிரிந்த தன் பெற்றோர் விரைவில் ஒன்று சேரப் பிராத்தனை செய்தார்.

இதன் அடிப்படையில் மயிலாடுதுறை அருகிலுள்ள திருவேள்விக்குடித் திருத்தலத்தில், சங்கல்ப (இரட்டை) விநாயகர் என்ற பெயரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.

"ஆதி இரட்டை விநாயகர்''. அதுபோலவே திருச்சி பாலக்கரைப் பகுதியிலும் இரட்டைப் பிள்ளையார் அருள்புரிகிறார்.பிள்ளையாருக்கு உரிய தேய்பிறை சதுர்த்தி திதி மட்டுமின்றி திருவோணம், திருவாதிரை, விசாக நட்சத்திரங்களும் திதிகளில் பஞ்சமியும் இவருக்குரியதாகக் கருதப்படுகிறது.

பல மடங்கு பலன் தரும் இரட்டைப் பிள்ளையார் வழிபாடு | Benifits Of Praying Double Vinayagar Worship

செவ்வாய் தோஷத்தால் தடங்கல் ஏற்பட்டு வாழ்கையில் அவதி படுபவர்கள் தேய்பிறை சதுர்த்தியில் இவருக்கு அருகம்புல் மாலை அணிவித்து அர்ச்சித்து வழிபட்டால் தோஷம் விலகும்.

மேலும் சந்திரனால் ஏற்பட்ட தோஷம் விலக கார் அரிசியில் மோதகம் (கொழுக்கட்டை) செய்து நிவேதனம் செய்யவேண்டும்.

வீட்டில் விநாயகர் சிலையை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டும்?

வீட்டில் விநாயகர் சிலையை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டும்?


திருவோண நட்சத்திரத்தில் இந்த இரட்டைப் பிள்ளையாருக்கு மாம்பழங்கள் நிவேதனம் செய்து ஏழைத் தம்பதிகளுக்கு அளித்தால், கணவன்-மனைவி உறவு பலப்படும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். திருவாதிரையன்று வில்வத்தால் மாலை தொடுத்து இவரை வழிபட்டால் நோய் நொடிகள் குணமாகும். ஆரோக்கியமாக வாழலாம்.

பஞ்சமி திதியில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட்டால் கடன் பிரச்சினைகள் தீரும். செல்வ வளம் பெருகும்.

பல மடங்கு பலன் தரும் இரட்டைப் பிள்ளையார் வழிபாடு | Benifits Of Praying Double Vinayagar Worship

விசாக நட்சத்திரத்தன்று இரட்டை விநாயகருக்கு பூக்களால் தொடுத்த போர்வை போன்ற மலர் ஆடை அணிவித்தால் குடும்பத்தில் சுப காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.பொதுவாக, செவ்வாய்க்கிழமைகளில் வழிபட நாகதோஷம் விலகும்.

சனிக்கிழமைகளில் கனி வர்க்கத்தில் ஏதாவது ஒன்றைச் சமர்ப்பித்து வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும். மேலும் இந்த இரட்டை பிள்ளையாரை வழிப்பட வாழ்க்கையில் எல்லா நலமும் பெற்று சிறப்பாக வாழ்வதோடு மட்டும் அல்லாமல் சந்தோஷமும் இரட்டிப்பாக கிடைக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US