வீட்டில செல்வம் பெருக கையில் வெள்ளி மோதிரம் அணியுங்கள்
தங்கத்தை காட்டிலும் வெள்ளியின் விலை குறை என்பதை தாண்டி தங்கத்தை காட்டிலும் வெள்ளி அதிர்ஷ்டம் நிறைந்தது என்கின்றனர்.அதாவது ஒருவர் கையில் வெள்ளி மோதிரம் அணிந்தால் அவர்கள் செல்வ செழிப்போடு வாழ்வார்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது.
வெள்ளி என்பது சுக்கிர கிரகத்துடன் தொடர்புடையதாகும். பொதுவாக வெள்ளி மோதிரம் போடுவது சந்திரனை குறிக்கிறது. சந்திரனை மனோ கிரகம் என்று சொல்வோம்.
அதனை கையில் அணிவது ஒருவருக்கு சிறந்த பலனை தரும். மேலும் வெள்ளி அணிவது நமது உடல் ரீதியாக ஆரோக்கியமான பல பலன்களையும் தருகிறது. அதேசமயம் சரியான விரலில் மோதிரம் அணிவது வாழ்வில் அதிசயங்களையும் உண்டாக்கும்.
வெள்ளியை எப்படி பயன்படுத்தினால் வாழ்வில் சிறப்பை உண்டாக்கும்? என்று பார்க்கலாம்
ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் வெள்ளி மோதிரம் வாங்கி சந்தனமும், பன்னீரும் கலந்த நீரில் கழுவி இஷ்ட தெய்வம் அல்லது மகா லட்சுமியின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்த பின் அணிந்து கொள்ளவும்.
வெள்ளி மோதிரத்தை மோதிர விரல் அல்லது நடு விரல் அல்லது ஆள்காட்டி விரல் ஆகிய விரல்களில் அணிந்து கொள்ளலாம்.
அதாவது மேஷம், சிம்மம், தனுசு ஆகிய நெருப்பு ராசியை சார்ந்த பெண்கள் மோதிர விரலிலும் ரிஷபம், கன்னி, மகரம், கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய நில மற்றும் நீர் ராசியை சார்ந்தவர்கள் நடு விரலிலும் மிதுனம், துலாம், கும்பம் ஆகிய காற்று ராசியை சார்ந்தவர்கள் ஆள்காட்டி விரலிலும் வெள்ளி மோதிரத்தை அணிந்து கொள்ளலாம்.
இவ்வாறு வெள்ளி மோதிரம் அணிவதால் வெள்ளியிலிருந்து வெளிவரும் ஒரு சில மின் அலைகள் உடலில் இருக்கும் நரம்புகள் வழியே சென்று உடல் உள் உறுப்புகளுக்குள் இருக்கும் நோய்களை குணப்படுத்துகிறது. வெள்ளி மோதிரம் அணிய விரும்பாதவர்கள் கழுத்தில் வெள்ளி செயின் அணிந்து கொள்ளலாம்.
இவ்வாறு ஒருவர் வெள்ளி மோதிரம் அல்லது வெள்ளி சம்மந்தமான பொருட்களை அணியும் பொழுது சந்திரனின் தாக்கத்தை அதிகரிப்பதுடன் சளி மற்றும் இருமல் போன்றவற்றை சரிசெய்யவும் உதவுகிறது.
புதுமண தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படவும், தொழில், வியாபாரம், மார்க்கெட்டிங் துறையில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் வெள்ளி மோதிரத்தை அணியலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |