ஸ்ரீ ராம ஜெயம் எழுதிய நோட்டுகளை என்ன செய்யலாம்?
நாம் நினைத்த காரியத்தை முடிக்க இறைவழிபாட்டில் முழு ஈடுபாட்டோடுbஇருப்பார்கள். அப்படியாக நம்மில் பலரும் வீட்டில் நினைத்த காரியம் நடக்கவேண்டி ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவது உண்டு.
சிலர் தினமும் 108 முறை ராமரை நினைத்த ஸ்ரீ ஜெயம் எழுதும் பழக்கம் இருக்கும்.அதற்கான தனி நோட் ஒன்று போட்டு கொள்வார்கள்.ஆனால் பலருக்கும் அந்த பக்கங்கள் தீர்ந்த பிறகு அந்த நோட்யை என்ன செய்வது என்று தெரியாது.
இப்பொழுது ஸ்ரீ ராமஜெயம் எழுதி தீர்ந்த நோட்யை என்ன செய்வது என்று பார்ப்போம். ராமரை நினைத்தாலே வெற்றி பிறக்கும்.
பெருமாள் மனித அவதாரமாக ஸ்ரீ ராம அவதாரம் எடுத்து பூமிக்கு வந்து வாழ்ந்தார்.பூமியில் வாழ்ந்த காலங்களில் ராமருக்கு பல சோதனைகள் வந்து இருந்தாலும் அதை எல்லாம் தாண்டி வெற்றி பெற்றார்.
அப்படியாகராமர் ஒழுக்கம் வீரம் அறிவு என அனைத்திலும் சிறந்து விளங்கினார்.அப்படியாக வாழ்க்கையில் பல தடங்கல் இழப்புகள் சோதனைகள் இருப்பவர்கள் ஸ்ரீ ராம ஜெயம் எழுதி ராமரை நினைத்து வழிபட நடக்காது என்று நினைத்த காரியம் எல்லாம் நடந்தேறும்.
மேலும் ஒருவர் ஸ்ரீ ராம ஜெயம் எழுதிய நோட் தீர்ந்து போனால் அந்த நோட்யை எடுத்து பூஜை அறையில் வைப்பது சிறப்பு.இல்லாவிட்டால் ராம நாம வங்கிக்கு அனுப்பிவைத்து விடலாம்.
ஸ்ரீ ராம ஜெயம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |