பெட் ரூமில் ராதை கிருஷ்ணன் படத்தை வைக்கலாமா?
அன்பின் அடையாளமாக திகழும் ராதை கிருஷ்ணரை அனைவரும் விரும்புவார்கள். அவர்களின் படத்தை வீடுகளில் வைக்க ஆசைக்கொள்வார்கள். அதிலும் குறிப்பாக சிலர் பெட் ரூமில் வைத்துக்கொள்ள விரும்புவார்கள். இருப்பினும் பலருக்கும் ராதை கிருஷ்ணன் படத்தை வீடுகளில் வைக்கலாமா? கூடாதா? என்ற சந்தேகம் இருக்கும். அதைப் பற்றி பார்ப்போம்.
ராதை கிருஷ்ணர் படத்தை நாம் படுக்கும் அறையில் வைப்பதால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கிறது என்று சொல்கிறார்கள். அதே போல் நம் மனதில் அமைதியும், நிம்மதியும் பொறுமையும் உண்டாக நாம் வீட்டில் ராதை கிருஷ்ணர் படத்தை வைக்கலாம் என்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக கணவன் மனைவி இடையே நல்ல அன்பும் பிணைப்பும் உண்டாக ராதை கிருஷ்ணர் படத்தை கட்டாயம் நாம் உறங்கும் அறையில் வைக்கலாம். சில வீடுகளில் திருமணம் ஆகி சில வருடங்களில் கணவன் மனைவி இடையே மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டு விடும்.
அவர்கள் கட்டாயம் உறங்கும் அறையில் ராதை கிருஷ்ணர் படம் வைத்து அதை அடிக்கடி பார்த்துக்கொள்ள அவர்களுக்கு இடையே உள்ள விரிசல் விலகும். மிக முக்கியமாக ராதை கிருஷ்ணர் படத்தை வீடுகளில் வைப்பதால் வீடுகளில் நேர்மறை ஆற்றல் பெருகும் என்கிறது சாஸ்திரங்கள்.
அந்த அறை முழுவதும் அன்பால் நிரப்பப்பட்டு மனதில் உற்சாகம் உண்டாகும். மனதில் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிக்கல்களை போக்கி நல்ல வளர்ச்சியை தருகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |