இப்பிறவி கர்ம வினைகளை எவ்வாறு கழிப்பது?

By Sakthi Raj Jun 28, 2025 12:05 PM GMT
Report

  கர்மவினைகள் என்பது மனிதன் அவன் அனுபவித்து ஆகவேண்டிய முக்கியமான கடமை ஆகும். முன் பிறவிகளில் அவன் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை இந்த பிறவியில் தான் செய்தது தவறு என்று உணர செய்வதே இந்த கர்மவினையின் செயல் ஆகும்.

அப்படியாக, இந்த பிறவியில் நாம் சந்திக்கும் கர்மவினையை நாம் எவ்வாறு கழிப்பது. அதற்கு பரிகாரங்கள் உண்டா என்று பார்ப்போம்.

மனிதனாக பிறந்த நாம் சகமனிதர்களை ஏமாற்றி விடலாமே தவிர்த்து இறைவனையும் காலத்தையும் ஒரு பொழுதும் ஏமாற்ற முடியாது. அதே போல் தான் நாம் அனுபவித்து ஆகவேண்டிய இந்த கர்மவினைகளும். அதை ஏமாற்றவோ, அதில் இருந்து தப்பிக்கவோ  முடியாத ஒன்றாகும்.

இப்பிறவி கர்ம வினைகளை எவ்வாறு கழிப்பது? | Karma Is Real In This World Tamil

பலரும் தனக்கு துன்பம் என்று வந்து விட்டால் துடித்து விடுவார்கள். அந்த துன்பத்தை கடக்க செய்வதறியாது சமயங்களில் சில பாவங்கள் செய்து விடுவார்கள். அவ்வாறு இல்லாமல், தனக்கு நடப்பவை எல்லாம் நாம் அனுபவித்தால் மட்டுமே மோட்சம் பெற முடியும், இறைவனை அடைய முடியும் என்று உணர்ந்து தனக்கு நடப்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை கொண்டு வரவேண்டும்.

அதுவே சிலர் தேவை இல்லாமல் நம்மை காயப்படுத்தினாலும், ஏமாற்றினாலும் இறைவன் மீது பாரத்தை போட்டு வழக்கு தொடுத்து அதை சட்டபூர்வமாக சந்தித்துக்கொள்வதே சிறப்பு. அதை விடுத்து அந்த நபருக்கு சாபம் கொடுப்பதாலும் அவனிடம் நாம் வம்புக்கு செல்வதாலும் எதுவும் மாறப்போறது இல்லை.

அவ்வாறு செய்வதால் நம் கர்மவினை மேலும் வலுவாகத்தான் செய்யும். ஆக, நம்முடைய மனதையும் செயலையும் சுத்தமாக வைத்துக்கொண்டு வாழ்க்கை கொடுக்கும் வலியையும் மகிழ்ச்சியையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள பழக வேண்டும்.

வீட்டில் ஐஸ்வர்யம் பெருக செய்யவேண்டிய ஆன்மீக குறிப்புகள்

வீட்டில் ஐஸ்வர்யம் பெருக செய்யவேண்டிய ஆன்மீக குறிப்புகள்

எது நடந்தாலும் நன்மைக்கே, பிரச்சனையை கொடுத்த இறைவனுக்கு அதற்கான தீர்வும் கொடுக்கத்தெரியும் என்று நம்ப வேண்டும். இந்த பூமியை மனிதனை கடந்து ஒரு சக்தி இயங்கிக்கொண்டு இருக்கிறது என்ற உணர்தல் வேண்டும்.

இன்றைய வலி நாளை நமக்கு ஆறுதல்என்று தெளிவு வேண்டும். பார்ப்பவர்கள் பழகுபவர்கள் எல்லாம் முற்பிறவி தொடர்ச்சியே என்று வெறுப்பும் விருப்பமும் இல்லாமல் கடமையை செய்தல் வேண்டும்.

ஆதலால் நடப்பவை எல்லாம் காரணத்திற்காக மட்டுமே. அழுவதால் எதுவும் மாறப்போவது இல்லை. ஆனால் அவனை தொழுவதால் எல்லாம் மாறும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US