இந்தியாவின் டாப் 5 பணக்காரக்கோயில்கள் எது தெரியுமா?
இந்திய ஒரு ஆன்மீக பூமி. இங்கு பல்வேறு ஊர்களிலும் மாவட்டங்களிலும் மாநிலங்களிலும் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்கள் அமைந்து உள்ளது. இவை எல்லாம் பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் ஆகும்.
ஒவ்வொரு கோயில்களின் கட்டிட கலைகளும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைய பெற்று இருப்பது முற்றிலும் அதிசயம் தான். அப்படியாக, இந்தியாவில் பல்வேறு கோயில்கள் இருந்தாலும் குறிப்பிட்ட சில கோயில்கள் மிகவும் விஷேசம் நிறைந்தவையாகவும் இந்தியாவின் டாப் 5 பணக்கார கோயில்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.
ஆதாவது பக்தர்கள் அளிக்கும் காணிக்கையாலும் அதிகப்படியான பக்தர்கள் வருகை ஆகியவற்றால் இந்த கோவில்களுக்கு அதிக வருமானம் வந்து கொண்டிருக்கிறது.
இந்த கோவில்களின் ரகசிய அறைகள் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளதால் அவற்றில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தங்கம், வெள்ளி, வைரங்களின் மதிப்பு கண்டறியப்படாமல் உள்ளது. அவ்வாறு எந்த கோயில்கள் பணக்கார பட்டியிலில் உள்ளது என்று பார்ப்போம்.
1.திருப்பதி:
உலக பணக்கார கோயில் என்று சொன்னாலே அனைவருக்கும் திருப்பதி ஏழுமலையான் தான் நினைவிற்கு வருவார். இங்கு தினமும் குறைந்தது 80,000 பக்தர்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இங்கு அதிகப்படியான பக்தர்களின் வருகையால் தினமும் கோயில் உண்டியலில் காணிக்கையாக மட்டும் ரூ.4.5 கோடி கிடைக்கிறது. இதுவே வருடம் சுமார் ரூ.1,400 கோடி வரை கிடைக்கிறது. இந்த கோவிலில் சொத்து மதிப்பு ரூ.3 லட்சம் கோடிக்கு அதிகம் என சொல்லப்படுகிறது.
2. ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில்:
இந்தியாவில் பணக்கார கோயில் பட்டியிலில் இரண்டாவது இடத்தை பிடித்து உள்ளது கேரளாவில் உள்ள பத்மநாப சுவாமி கோயில். இந்த கோயில் ஸ்ரீ ஹரி விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதோடு, இந்த கோயிலை மையமாக வைத்து தான் அந்த ஊருக்கு (திரு+அனந்த+புரம்) திருவனந்தபுரம் என்ற பெயரே வந்தது.
மேலும், இக்கோயிலில் 2011 ஆம் ஆண்டு ரகசிய அறை திறக்கப்பட்டது. அதனுடைய சொத்து மதிப்பு ரூ.1.2 லட்சம் கோடிக்கும் மேல் இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இதுவரை மற்ற அறைகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
3. குருவாயூர் கிருஷ்ணன்:
குருவாயூர் கோயில் 5,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கோயிலாகும். கிருஷ்ணர் சிலைக்காகப் பிரபலமானது கோயிலாகும். கிருஷ்ணரின் தனிப்பெரும் சிறப்பு மிக்க குருவாயூர் ஸ்ரீ கிருணன் கோயில் பணக்கார கோவில்களில் ஒன்று. இக்கோயிலின் சொத்து மதிப்பு சுமார் 2500 கோடிக்கு மேல் இருப்பதாக சொல்கிறார்கள்.
4. வைஷ்ணவ தேவி கோவில், ஜம்மு:
51 சக்தி பீடங்களில் மிக முக்கியமான கோயில் ஆகும். இது ஒரு குகை கோயில். இந்த வருகை தரும் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த தங்கத்தின் மதிப்பு மட்டும் சுமார் 1.2 டன்னுக்கும் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
காஷ்மீரில் இருந்து 12 கி.மீ., தொலைவில் 52,000 அடி உயரத்தில் குகை கோயிலாக இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக பார்க்கபடுகிறார். இக்கோயிலின் சொத்து மதிப்பு மட்டுமே ரூ.2000 கோடி வரை இருப்பதாக சொல்லப்படுகிறது.
5. ஷீரடி சாய்பாபா மந்திர், மகாராஷ்டிரா:
உலகம் எங்கிலும் சாய்பாபாவிற்கு பக்தர்கள் அதிகம் உள்ளார்கள். இத்தாலி நாட்டு மார்பிளால் ஆன பளிங்கு கல்லால் செல்லப்பட்ட சாய்பாபாவின் சிலை பல லட்சம் பக்தர்களை ஈர்த்து வருகிறது.
இக்கோயிலுக்கு தினமும் சுமார் 25,000 பக்தர்கள் வருகை புரிகிறார்கள். 1922 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கோயில் 2022-ம் ஆண்டில் மட்டும் ரூ.400 கோடிக்கும் அதிகமான நன்கொடைகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், இக்கோயிலின் சொத்து மதிப்பு சுமார் 2000 கோடிகளுக்கு மேல் இருக்கும் என்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |