நாம் செய்யவேண்டிய எளிய பரிகாரமும் அதன் பலன்களும்

By Sakthi Raj Jun 29, 2025 05:51 AM GMT
Report

நம் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு இன்னல்களுக்கும் தடைகளுக்கும் இறைவழிபாடு மிக பெரிய துணையாக இருந்து வழி நடத்துகிறது.

அப்படியாக, இறைவழிபாட்டில் பரிகாரம் என்று சொல்லப்படும் சில வேண்டுதல்கள் நமக்கு பல வகையில் பலன்களும் மாற்றங்களையும் கொடுக்கிறது. அப்படியாக, நாம் செய்யும் பரிகாரங்களுக்கு ஏற்ற பலன் என்னவென்று பார்ப்போம்.

இந்தியாவின் டாப் 5 பணக்காரக்கோயில்கள் எது தெரியுமா?

இந்தியாவின் டாப் 5 பணக்காரக்கோயில்கள் எது தெரியுமா?

1. எந்த ஒரு திங்கட்கிழமையும், அமாவாசையும் சேர்ந்து வருகிறதோ அன்றைய தினம் மறக்காமல் அரச மரத்தை 108 முறை பிரதட்சணம் செய்தால் மகா புண்ணியம் வந்து சேரும்.

2. வீட்டில் தொடர் மன கஷ்டம், பொருளாதார நெருக்கடிகளால் அவதி படும் பொழுது ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் நெய்தீபம் ஏற்றி வழிபட கஷ்டங்கள் தீரும்.

3. நாம் வியாபாரம் செய்யும் இடத்தில் கடையை மூடும் முன் சூடம் ஏற்றி வைத்து வந்தால் வியாபாரம் நல்ல முன்னேற்றம் பெரும். அதேப்போல் எலுமிச்சம் பழம் வெட்டி குங்குமம் தடவி கடையைச்சுற்றி கடையின் நான்கு திசைகளிலும் போட்டால் வியாபாரம் நன்கு விருத்தியாகும்.

4. குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க புதன், வியாழக்கிழமைகளில் அமிர்த யோகம், சித்தயோகக் காலத்தில் பள்ளியில் சேர்ப்பது கல்வியில் நல்ல முன்னேற்றம் வழங்கும்.

5. தொடர்ந்து 6 தேய்பிறை அஷ்டமிகளில் சிவபெருமான் கோயிலில் உள்ள பைரவருக்கு சிவப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து வந்தால் விரைவில் நினைத்தது கைகூடும்.

6. திருஷ்டி செய்வினை கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் திரிசூலத்தில் குங்குமம் இட்டு எலுமிச்சைபழத்தை குத்தினால் திருஷ்டிசெய்வினை நீங்கும்.

7. நீண்ட நாட்களாக திருமண தடையை சந்திப்பவர்கள் பிரதோஷ நாளில் நந்திபகவானுக்கு பால், தயிர் வாங்கி கொடுத்து வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US