பூனை குறுக்கே போனால் கெட்ட சகுனமா ?

By Sakthi Raj Jun 02, 2024 07:40 PM GMT
Report

பல ஆண்டு காலமாக பூனை கேட்ட சகுனமாவே பார்க்கப்படுகிறது.அதுனாலயே வீட்டில் பூனையை வளர்ப்பது பெரும்பாலும் தவிர்த்து விடுகிறார்கள்.

அதாவது வெளியூர் பயணம் இல்லை நல்ல காரியம் செல்லும் பொழுது பூனை குறுக்கே சென்றால் அது கேட்ட சகுனமாக பார்க்க படுகிறது.அதை பற்றி பார்ப்போம்.

பூனை குறுக்கே போனால் கெட்ட சகுனமா ? | Cat Nala Nerangal Sagunangal Palangal Parigaram

பூனை குறுக்கே சென்றால் தண்ணீர் குடித்துவிட்டு சிறிது நேரம் அமர்ந்துவிட்டு செல்ல வேண்டும் என்ற மூடநம்பிக்கையை நம்புகிறார்கள். இந்த பூனைக்கு பின்னால் ஒரு பெரிய கதையே இருக்கிறது.

அதாவது அந்த காலங்களில் மோட்டார் வாகனங்கள் கண்டுபிடிக்கும் காலங்களுக்கு முன்பு மக்கள் குதிரை வண்டிகளிலும் மாட்டு வண்டிகளிலும்தான் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வர்.

எலுமிச்சையில் ஒரு மூடியில் குங்குமம்,மறுமூடியில் மஞ்சள் தடவி வைப்பது ஏன்?

எலுமிச்சையில் ஒரு மூடியில் குங்குமம்,மறுமூடியில் மஞ்சள் தடவி வைப்பது ஏன்?

இதனால் 50 கி.மீ.ரில் உள்ள பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டும் என்றாலும் கூட பலமணி நேரம் தாமதமாகும். ல நேரங்களில் நீண்ட தூர பயணங்கள் நாள் கணக்கில் இருக்கும்.

இதற்காக கட்டு சோறு கட்டிக் கொண்டு வண்டியை நிறுத்தி சாப்பிட்டு விட்டு இரவெல்லாம் பயணிக்க வேண்டிய சூழல் வரும்.

அப்போது இரவு நேரத்தில் காட்டு பகுதியில் பூனைகள் வரும் அதன் கண்கள் பார்ப்பதற்கு ரேடியம் விளக்கு போல் மின்னும், உடல் எல்லாம் தெரியாது, கண்கள் மட்டும் மின்னும். அது பூனையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, புலி, சிறுத்தை, சிங்கம் உள்ளிட்ட விலங்குகளின் கண்களும் இரவு நேரத்தில் மின்னும்.

பூனை குறுக்கே போனால் கெட்ட சகுனமா ? | Cat Nala Nerangal Sagunangal Palangal Parigaram

இதனால் அந்த மின்னொளியை பார்த்து குதிரையோ மாடோ பயந்தால் மிரளும், இதனால் வண்டி ஆட்டம் காணும். பின்பு பயணமே பாதிக்கப்படும்.

இதனால்தான் இது போல் பூனையின் கண்களை பார்த்துவிட்டாலே அது பூனையோ இல்லையோ சிறிது நேரம் மரத்தின் கீழ் ஓய்வெடுத்துவிட்டு குதிரைக்கும் மாட்டிற்கும் தண்ணீர் காட்டிவிட்டு செல்வார்கள்.

இதுதான் பூனை குறுக்கே சென்றால் அபசகுனம் என்றாகிவிட்டது. விதி என்ற ஒன்று தாயின் கருவறையில் நாம் இருந்த போதே எழுதியாகிவிட்டது.

எனவே எல்லாம் அதுபடிதான் நடக்கும் என சொல்லிவிட்டு தன்னம்பிக்கையுடன் செல்லுங்கள். ஜெயம் நிச்சயம்! உழைப்பை நம்புங்கள். உன் வாழ்க்கை உன் கையில்! 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US