சாணக்கிய நீதி: இந்த பழக்கங்கள் இருந்தா உடனடியாக விட்டுருங்க- வெற்றி உங்கள் வசம்
சிறந்த அரசியல்வாதி மற்றும் ராஜதந்திரியான சாணக்கியர் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ஆழ்ந்த அறிவு கொண்டவர்.
இவர் விட்டுச்சென்ற பல நெறிமுறைகளை மக்கள் பின்பற்றிவருகின்றனர், அவ்வாறு வாழ்வில் வெற்றி பெற வேண்டுமானால் எந்தெந்த பழக்கங்களை கைவிட வேண்டும் என கூறியுள்ளார்.
அதுபற்றி பார்க்கலாம்.
சோம்பேறித்தனம்
வாழ்வில் வெற்றி பெற நாம் முதலில் விட வேண்டிய சோம்பேறித்தனத்தை தான், பெரிய இலக்குகளில் கவனம் செலுத்த வேண்டுமானால் நல்ல விஷயங்களை தாமதிக்காமல் செய்துமுடித்தாக வேண்டும், நாளை என்ற நினைப்பு இருந்தாலே இலக்குகள் தள்ளிப்போகும், இன்றைய நாள் எனக்கான நாள் என்ற எண்ணம் மட்டுமே வளரச்செய்யும்.
பேராசை
இந்த உலகில் வாழும் ஒவ்வொரு நபருக்குமே ஆசைகள் இருக்கும், ஆனால் அது நிச்சயமாக தகுதிக்கும், தேவைக்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும், ஆசைகள் இருப்பதில் தவறில்லை, அது பேராசையாக இருக்கக்கூடாது. இது தவறான பாதைக்கு நம்மை இட்டுச்செல்வதுடன் நமது குணநலன்களையும் மாற்றிவிடும்.
கோபம்
அடுத்தது மிக முக்கியமான கோபம், கோபத்தால் நிதானத்தை இழந்துவிடும், கோபத்தில் எடுக்கும் முடிவுகள் நிச்சயம் தவறானதாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, கோபம் நம்மையும் அழித்து நம்மை சார்ந்தவர்களையும் அழித்துவிடும், எந்தவொரு செயலாக இருந்தாலும் நிதானத்துடன் யோசித்து அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்தது.
ஆணவம்
தான் பெரிய ஆள் என்ற ஆணவம் எப்போதும் கூடாது, வயதில் சிறியவர்களாக இருந்தாலும் கூட புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம், வாழ்வின் ஒவ்வொரு நாளுமே புதிய பக்கங்கள் தான், வெற்றியை பெற எந்த எல்லைக்கும் செல்லலாம், மகிழ்ச்சியாக பொழுதை கடந்துவிடுங்கள்.
பாதுகாப்பின்மை
ஒரு செயலை தொடங்குவதற்கு முன்னர் சரியான திட்டமிடலுடன் இருப்பது அவசியம், ஆனால் பாதுகாப்பின்மை காரணமாக அதை செய்யாமல் இருக்க வேண்டாம், இது வெற்றியை தடுத்துவிடும்.