சிதம்பரம் நடராஜர் கோவில்.., ஆனி திருமஞ்சன கொடியேற்றம்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலகம் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டு தோறும் ஆனி திருமஞ்சன விழா நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில், இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மேலும், நாளை 24ஆம் திகதி சந்திரபிறை வாகனத்தில் சாமி வீதி உலாவும், 25ஆம் திகதி தங்க சூரிய பிறை வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 1ஆம் திகதி நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடக்கிறது.
2ஆம் திகதி அதிகாலை காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம், 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடக்கிறது.
அன்று மதியம் 3 மணிக்கு மேல் ஆனிதிருமஞ்சன தரிசனம், ஞானகாச சித்சபா பிரவேசம் நடக்கிறது.
மேலும், 4ஆம் திகதி தெப்ப உற்சவத்துடன்ஆனி திருமஞ்சன திருவிழா முடிவடைகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |