பித்ரு தோஷம் நீங்க அமாவாசையன்று இதை மறக்காமல் செய்யுங்கள்

Slogam
By Yashini May 07, 2024 06:46 AM GMT
Yashini

Yashini

Report

அமாவாசை என்பது முன்னோர்கள் வழிபாட்டிற்குரிய நாளாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த நாளில் விரதம் இருந்து பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, தான தர்மம் வழங்குவதால் பித்ருக்களின் ஆசி கிடைக்கும்.

அந்த வகையில் இன்றும், நாளை வைஷாக அமாவாசை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.  வைஷாக அமாவாசை, மே 7ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது.

பித்ரு தோஷம் நீங்க அமாவாசையன்று இதை மறக்காமல் செய்யுங்கள் | Chithirai Amavasya 2024

அதாவது மே 7 காலை 11.40 மணிக்கு தொடங்கி மறுநாள் புதன்கிழமை 8 மே காலை 8.51 மணிக்கு முடிவடைகிறது.

இந்த நிலையில், மே 8ஆம் தேதி புதன்கிழமை வைஷாக அமாவாசையும், மே 7ஆம் தேதி தர்ஷ அமாவாசையும் வரும்.

இந்த நாளில் அரச மரத்திற்கு சில பொருட்களை கொண்டு அர்ச்சனை செய்தால் பித்ரு தோஷம் நீங்கும். அது என்னவென்று பார்க்கலாம்.

அமாவாசை திதியில் சந்திரன் மறைந்து அதன் நிலை பலவீனமடையத் தொடங்குகிறது.

பித்ரு தோஷம் நீங்க அமாவாசையன்று இதை மறக்காமல் செய்யுங்கள் | Chithirai Amavasya 2024

இந்த நாளில் ஒரு நபர் அரச மரத்திற்கு செம்பு பாத்திரத்தில் பால் ஊற்றினால், ஜாதகத்தில் அவரது நிலை வலுவடையும் என்று சொல்லப்படுகிறது.

இதே போன்று, அரசு மரத்திற்கு எள்ளை வழங்குவது வீட்டில் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும். மேலும் பித்ரு தோஷத்தையும் நிவர்த்தி செய்யுமாம். 

அரச மரத்திற்கு நீர் ஊற்றி குளிர்விப்பது பித்ருக்களை மகிழ்ச்சியாக்குவதற்கு சமமாகுமாம். இதை செய்வதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சி பெருகுமாம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 

 

+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US