தானம் செய்வதனால் தீரும் நம் பாவங்கள்

By Sakthi Raj Apr 02, 2024 04:07 AM GMT
Report

கடவுளின் படைப்புகளில் எல்லாமே அழகு தான். உண்மையில் அவரது படைப்பில் கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு. அதில் பறவை விலங்குகளிடம் இல்லாத அறிவை கடவுள் மனிதனுக்கு கொடுத்திருக்கிறார். அதுதான் ஆராயும் தன்மை.

தானம் செய்வதனால் தீரும் நம் பாவங்கள் | Darmam Pavangal Karnan

மனிதனால் நல்லது கெட்டது என ஒரு விஷயத்தை ஆராய்ந்து முடிவு எடுக்க முடியும். ஆனால் எத்தனை ஆராயும் தன்மை இருந்தாலும் சுயநலத்தால் பல நேரங்களில் மனிதன் தன்னை இழந்து பாவ செயல்கள் செய்து பாவ கணக்கில் மாட்டிக்கொள்கின்றான்.

ஆனால் சில மனிதர்கள் யாரிடம் எதுவும் எதிர்பாராமல் தான தர்மம் செய்து நாம் புண்ணிய தேட வேண்டும் என்று மெனக்கிடல்கள் இல்லாமல் புண்ணியம் சேர்த்துக் கொள்கின்றனர், அவர்களிடம் தான் வாழ்க்கையில் கற்று கொள்ள வேண்டிய பாடம் நிரம்பி கிடக்கும்.

தானம் செய்வதனால் தீரும் நம் பாவங்கள் | Darmam Pavangal Karnan

அப்படி எதையும் எதிர்பாராமல் தானம் செய்பவர்களின் குலத்தினை அது தழைக்க செய்யும், ஆதலால் ஒவ்வொரு பிறவியிலும் செய்யும் வினைகளுக்கு ஏற்ப நன்மை தீமைகள் நம்மை அனுபவிக்க செய்கிறது. அதில் இருந்து விடுபட தான் தானம் தர்மம் செய்வது சிறப்பு.

தானம் செய்வதனால் தீரும் நம் பாவங்கள் | Darmam Pavangal Karnan

மேலும், நாம் செய்யும் தானமானது அது தகுதி உடையவர்களை சேரும் பொழுது உத்தம பலன் கிடைக்கிறது.

அதுவே நாம் செய்யும் தானமானது அதற்கு தகுதி உடையவர்தானா என பார்க்கமால் செய்வதற்கு மத்திம பலன் கிடைக்கின்றது. எல்லோரும் செய்கிறார்கள் என நாமும் செய்தால் அதற்கு அதமப்பலன் கிடைக்கும் .

தானம் செய்வதனால் தீரும் நம் பாவங்கள் | Darmam Pavangal Karnan

மேலும் ஒருவர் வஸ்திர தானம் செய்யும் பொழுது அவருடைய ஆயுள் அதிகரிக்கும்.

உப்பு, வெல்லம் தானமாக கொடுக்கும் பொழுது குடும்பத்தில் உணவிற்கு பஞ்சம் ஏற்படாது.

பூசணிக்காய் தானம் வழங்கும் பொழுது தீராத நோய் விலகி பித்ருக்களின் ஆசி கிடைக்கின்றது.

பொன் தானம் செய்யும் வேளையில் அவருக்கு மோட்சம் கிடைக்கின்றது.

உடுத்தும் ஆடைகளை தானமாக வழங்கும் பொழுது தொழு நோய் தீரும்.

தேன் மற்றும் நெய் தானம் செய்யும் பொழுது சகல பாக்கியங்களையும் பெறுகின்றனர்.

தானம் செய்வதனால் தீரும் நம் பாவங்கள் | Darmam Pavangal Karnan

அடுத்தபடியாக ஒருவரது திருமணத்திற்கு உதவி செய்யும் பொழுது அவர்கள் எடுத்த பிறவியின் பாவங்கள் அனைத்தும் தீர்கின்றது.

இப்படியாக நாம் செய்யும் தானத்திற்கு பல பலன்கள் இருந்தாலும் எதையும் மனதார எதிர்பார்க்காமல் செய்தாலே அதற்கான பலன் கிடைக்கும்.

ஆதலால் எதிர்பாராமல் செய்வதின் பெயரே தானம் என் உணர்ந்து இல்லாமல் கஷ்டப்படும் உயிர்களுக்கு நம்மால் முடிந்ததை செய்வோம்.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US