சாலையில் திடீரென பணத்தை பார்த்தால் என்ன செய்யவேண்டும்?
நாம் சாலையில் நடந்து சென்று கொண்டு இருக்கும் பொழுதோ அல்லது வாகனத்தில் பயணம் செல்லும் பொழுதோ யாரேனும் அவர்கள் தவற விட்ட பணம் கீழே கிடப்பதை பார்க்க முடியும்.
அவை மிகவும் அரிதாக நடக்கூடிய விஷயம் என்றாலும், அவ்வாறு கிடைக்கும் பணத்தை என்ன செய்யவேண்டும்? அவை நமக்கு உணர்த்துவது என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
வாஸ்து ரீதியாக சாலையில் பணத்தை பார்ப்பது முன்னோர்களின் ஆசீர்வாதம் பெற்றதாக எடுத்துக்கொள்ளலாம் என்கிறார்கள். மேலும், நாம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது.
சீன நாட்டில் ரோட்டில் பார்க்கும் பணம் அதிர்ஷ்டத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. நாம் ஏதேனும் முக்கிய வேலைக்காக செல்லும் பொழுது சாலையில் பணத்தை பார்ப்பது அந்த வேலையில் வெற்றிகள் கிடைக்கும் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
அதுவே நாம் நினைத்த வேலை நன்றாக முடிந்து வீடு திரும்பும் பொழுது இவ்வாறு பணத்தை பார்ப்பது நம்முடைய பொருளாதார மேம்பாட்டை குறிப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும், நாம் சாலையில் பார்க்கும் பணத்தை கோயில் உண்டியலில் சென்று போட்டு விடலாம், அல்லது கஷ்டப்படுபவர்களுக்கு கொடுத்து விடவேண்டும் என்கிறார்கள். அதை ஒரு பொழுது நாம் நமக்காக எந்த ஒரு சொந்த செலவும் செய்யக்கூடாது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |