வீடுகளில் எந்த நாட்களில் நாம் தவறியும் விளக்கேற்ற கூடாது தெரியுமா ?
ஆன்மீக சாஸ்திரத்தில் தினமும் வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இருப்பினும் வீடுகளில் சில நாட்களில் தவறியும் விளக்கு ஏற்றக்கூடாது என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
1. ஒருவர் இறப்பு நேரத்தில் காரியம் முடிந்த பிறகு தான் விளக்கேற்ற வேண்டும். பங்காளிகளுக்கிடையே வீட்டில் இறப்பு இருந்தாலும் காரியம் முடியும் வரை நாம் ஒரு பொழுதும் விளக்கேற்றக்கூடாது.

2. பங்காளிகள் வீட்டில் குழந்தை பிறந்திருந்தாலும் புண்ணிய தானம் செய்வது வரை விளக்கேற்றி வழிபாடு செய்யக் கூடாது.
3. அதேபோல் குழந்தை பிறந்த தீட்டு என்பது சுப தீட்டு. சில வீடுகளில் 7 நாட்கள் தீட்டு இருக்கும். சில வீடுகளில் பத்தாவது நாள் புண்ணியா தானம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும்.
இதுபோன்ற தீட்டு நாட்களில் நாம் விளக்கு ஏற்றுவதால் வீடுகளில் லட்சுமி கடாட்சம் விலகலாம் என்று சொல்லப்படுகிறது. ஆதலால், இந்த தினங்களில் விளக்கேற்றுவதை தவிர்ப்பது நல்லது என்று சொல்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |