வாழ்க்கையில் நல்ல மாற்றம் அமைய இந்த நாளில் தீபம் ஏற்றுங்கள்

By Sakthi Raj Sep 06, 2024 11:01 AM GMT
Report

தீபம் ஏற்றுவதால் வாழ்க்கை மிக சிறப்பாக மாறும்.அதாவது உண்மையில் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் இறைவனை வேண்டி தீபம் போட நல்ல மாற்றம் நிச்சயம் நம் வாழ்க்கையில் நடக்கும்.

அப்படியாக ஒருவரின் ஜாதகத்தில் ஜென்ம நட்சத்திரம் எந்த அளவிற்கு பிரகாசமாக இருக்கிறதோ, அந்த அளவே அவரது வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். எனவே,ஒருவர் தங்களுடைய ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் ஒரு தீபமாவது ஏற்றி இறைவனை வழிபட வேண்டும்.

இவ்வாறு செய்வதனால் நாம் உணராத கண் திருஷ்டியும் நிவர்த்தியாகி அவர்களது நட்சத்திரம் பிரகாசமாகி வாழ்க்கையும் பிரகாசமாக அமையும்.

பொதுவாக நாம் வீடுகளில் ஏற்றும் தீபம் ஆனது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை உடைத்து நேர்மறை ஆற்றலை கொண்டு வரும்.

வாழ்க்கையில் நல்ல மாற்றம் அமைய இந்த நாளில் தீபம் ஏற்றுங்கள் | Deepam Yettruvathin Magimai

அப்படியாக நாம் வீடுகளில் ஆலயங்களில், இல்லங்களில், அலுவலகங்களில் தீபங்களை ஏற்றி வழிபட அந்த இடம் ஒளிமையமாவதோடு பலவித திருஷ்டி தோஷங்களின் நிவர்த்திகளையும் பெறலாம்.

ஒரு வீட்டில் எந்த அளவில் அதிக எண்ணிக்கையிலான தீபங்கள், எவ்வளவு நேரம் ஏற்றி ஒளிர செய்யப்படுகிறதோ அந்த அளவிற்கு திருஷ்டிகள் விலகி நன்மைகள் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.

ஆறு மாதம் ஒரு முறை நிறம் மாறும் விநாயகரின் அதிசய கோயில்

ஆறு மாதம் ஒரு முறை நிறம் மாறும் விநாயகரின் அதிசய கோயில்


நாம் தீபம் ஏற்றிய பிறகு தீபங்களின் சுடர்களை உற்றுநோக்கி குறைந்தது ஒரு நாளைக்கு 5 நிமிடங்களாவது தொடர்ந்து தரிசிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதனால் நம்மில் ஏற்பட்டுள்ள பலவித திருஷ்டி தோஷங்கள் கழிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் மனதின் லேசாகி தூய்மை அடையும்.

மேலும் மனதின் புத்திகூர்மை அதிகரிக்கிறது. எத்தகைய திருஷ்டி தோஷங்களுக்கும் சரியான, முறையான பலமான பரிகாரம் தீப ஜோதி வழிபாடுதான். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US