தவளைக்கு திருமணம் செய்து வைத்தால் உண்மையில் மழை வருமா?
இந்து மதம் பொறுத்தவரையில் ஒவ்வொரு ஊருக்கும், மாவட்டத்திற்கும் ஏற்ப அவர்களின் நம்பிக்கைகளும் சடங்குகளும் மாறுப்படும். அந்த வகையில் நம்முடைய தமிழ் நாட்டில் தவளைக்கு திருமணம் செய்து வைத்தால் வறட்சியால் வாடும் பூமியில் மழை பொழியும் என்பது தீராத நம்பிக்கை.
இது ஆதி காலங்களில் இருந்து பின்பற்றப்படும் நம்பிக்கையாக இருந்து வருகிறது. மேலும், இந்த சடங்கு இன்னும் முழு நம்பிக்கையுடன் சில பகுதியில் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு செய்து வைக்கும் திருமணம் உண்மையில் மழை கொண்டு வருமா? என்று பலருக்கும் பல சந்தேகங்கள் இருக்கும். அதை பற்றி பார்ப்போம்.
இந்த சடங்குகள் பொறுத்த வரையில் மழை வருகிறதா என்பதை தாண்டி இதை மக்கள் செய்யும் பொழுது அவர்களுக்கு மனதில் ஒருவித சந்தோசம் வருகிறது. அதோடு, மழை, காற்று, வெயில் போன்றவற்றுக்கு குறிப்பிட்ட தெய்வங்களை மகிழ்விப்பதற்காக இந்த சடங்கு நடத்தப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.
இந்த சடங்கை நடத்த கிராம மக்கள் ஆண் தவளை மட்டும் பெண் தவளை எடுத்துக்கொண்டு அவற்றிக்கு மனிதர்களுக்கு நடத்தும் திருமண சடங்கை போல் நடத்துகிறார்கள். அதாவது, மணமகளாகிய தவளைக்கு மஞ்சள் பூசுதல், நழுங்கு வைப்பது போன்ற சடங்குகள் நடக்கும்.
பிறகு இருவருக்கும் மாலை மாற்றி, கணவன் மனைவி என அறிவிக்கப்படுகிறது. பிறகு அந்த தம்பதியினரான இரு தவளைகளை ஆற்றில் விட்டு விடுகிறார்கள். இந்த சடங்கு குறிப்பாக மே மற்றும் ஜூன் மாதங்களில் வெப்பம் அதிகம் காணப்படும் வேளையில் நடத்துகிறார்கள்.
மகாவிஷ்ணு, உலக உயிர்களை காப்பதற்காக நீரிலும், நிலத்திலும் வாழும் பல அவதாரங்களை எடுத்தார் என்பதால் தவளைகளுக்கு திருமணம் செய்தால் மழை பெய்யும் என நம்புகிறார்கள்.
அதோடு இன்றளவும் தவளை சத்தமிட்டால் மழை வரும் என்பது நம்பிக்கை. அவ்வாறு மழை வரவில்லை என்றால் இரண்டாவது முறையில் தவளை திருமணம் செய்து வைக்கும் பொழுது மழை வருவது வியப்பில் ஆழ்த்தும் ஒன்றாகத்தான் இருக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |