பல்லி தலைக்கு மேல் விழுந்தால் நன்மையா? தீமையா?
நம்முடைய வீடுகளில் பல்லியின் நடமாட்டத்தை நாம் அதிக அளவில் காண முடியும். மேலும், பல்லி வீடுகளில் இருப்பது நன்மை என்கிறது வாஸ்து சாஸ்திரங்கள். அதோடு, வீடுகளில் பல்லி இருக்கும் இடத்தை பொறுத்து அதன் பலன் மாறுபடுவதாக சொல்கிறார்கள்.
நாம் சில நேரங்களில் கவனித்து இருந்தால், ஆழ்ந்து சிந்தனையில் நாம் ஒரு விஷயத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கும் பொழுது அதற்கு பதில் கொடுக்கும் விதமாக பல்லி சத்தம் எழுப்பும். அதற்கு பின்னால் பல ஆன்மீக விஷயங்கள் ஒளிந்து இருப்பதாக சொல்கிறார்கள்.
மேலும், சமயங்களில் பல்லி எதிர்பாராத விதமாக நம் தலைக்கு மேல், அல்லது உடலில் ஏதேனும் பாகங்களில் விழுந்து விடும். அவ்வாறு விழுந்த இடத்தை கல் உப்பைக்கொண்டு நாம் கழுவி விடுவோம்.
இது எதிர்பாராத செயல் என்றாலும், பல்லி நம் உடலில் விழும் பாகங்களை பொறுத்து பலன் மாறுபடுவதாக சொல்கிறார்கள். அந்த வகையில் பல்லி தலைக்கு மேல் விழுந்தால் அவை நன்மையா? தீமையா? என்று பல்லி தொடர்பான பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஜெயந்தி ரவி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |